கண்டி உட்பட மேலும் சில மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை

Date:

நாட்டின் பல பகுதிகளில் கடும் மழையுடனான வானிலை நிலவி வருகின்றது.மேலும், மத்திய மாகாணத்தின் பல பகுதிகளில் இன்று காலை முதல் தொடர்ந்து மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளதாக அங்கிருக்கும் எமது செய்தியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

குறிப்பாக கண்டி மாவட்டத்தின் பல பகுதிகளில் பெய்துவரும் கடும் மழையுடனான வானிலையை அடுத்து, பல தாழ்நிலப் பகுதிகள் நீரில் மூழ்கியுள்ளன.

கண்டி நகர், பேராதனை உள்ளிட்ட பல பகுதிகளின் தாழ் நிலப் பகுதிகளுக்குள் வெள்ள நீர் உட்புகுந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஆறுகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளதுடன், பல பாதிப்புக்களும் ஏற்பட்டுள்ளதாக தெரிய வருகின்றது.

இதேவேளை, கண்டி, நுவரெலியா மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவிக்கின்றது

Popular

More like this
Related

உஸ்தாத் ஏ.ஸீ. அகார் முஹம்மத் எழுதிய ‘100 வாழ்க்கைப் பாடங்கள்’ நூல் வெளியீட்டு விழா இன்று மாலை BMICH இல்

தமிழ் உலகில் தனது பேச்சாலும் எழுத்துக்களாலும் மக்கள் மனம் கவர்ந்த மார்க்க...

தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை: மேலதிக வகுப்புகளுக்கு நள்ளிரவு முதல் தடை!

2025 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையை கருத்திற்...

இலஞ்ச ஆணைக்குழுவினரால் சஷீந்திர ராஜபக்ஷ கைது

முன்னாள் விவசாய இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ஷ, இலஞ்சம் அல்லது ஊழல்...

சில மாவட்டங்களில் அவ்வப்போது மழை பெய்யக் கூடிய சாத்தியம்

இன்றையதினம் (06) நாட்டின் மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல் மாகாணங்களிலும் காலி,...