காவல்துறை மக்களுக்கு விடுத்துள்ள கோரிக்கை!

Date:

நாட்டில் மாகாணங்களுக்கு இடையிலான பயணங்களுக்கு நேற்று (13)நள்ளிரவு தொடக்கம் தடை விதிக்கப்பட்டுள்ளன.இதற்கமைவாக மாகாணங்களுக்கு இடையிலான போக்குவரத்தும் இன்று(14) தொடக்கம் தற்காலிகமாக தடைசெய்யப்பட்டிருப்பதாக பொது போக்குவரத்து துறையினர் தெரிவித்துள்ளது.

இதைத் தொடர்ந்து அரசாங்கத்தின் அறிவுறுத்தலுக்கு அமைவாக மாகாணங்களின் உள்ளக பஸ்களை பயன்படுத்தி மாகாணங்களுக்குள் குறித்த சேவைகள் அதிகரிக்கப்பட்டிருப்பதாக இலங்கை போக்குவரத்து சபையின் பிரதி பொது முகாமையாளர் பண்டுக்கஸ்வர்ணஹங்ச தெரிவித்துள்ளார்.

ஆடை உற்பத்தி, சுற்றுலா, வங்கிச் சேவை, ஊடகத்துறை, விவசாயம் உட்பட அத்தியாவசிய சேவை ஊழியர்களுக்கு தமது அடையாள அட்டையைக் காண்பித்து அதன் மூலம் மாகாணங்களுக்கு இடையிலான பயணங்களை மேற் கொள்வதற்கு முடியும்.

மாகாணங்களுக்கு இடையிலான பயண கட்டுப்பாட்டு அதிகாரிகள் இன்று தொடக்கம் கடுமையான முறையில் கண்காணித்து வருவதால் அத்தியாவசியமற்ற பயணங்களை தவிர்த்து கொள்ளுமாறு பொலிஸார் மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

 

 

Popular

More like this
Related

பேரிடரால் பாதிக்கப்பட்ட இலங்கை மக்களுக்கு ரியாதிலுள்ள SLISR மாணவர்களினால் மனிதாபிமான உதவி.

 ‘டிட்வா’ இயற்கைப் பேரழிவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுமுகமாக சவூதி அரேபியாவின் ரியாதிலுள்ள...

பண்டிகை காலத்தை முன்னிட்டு விசேட பாதுகாப்பு நடவடிக்கைகள்!

கிறிஸ்துமஸ் பண்டிகை காலத்தை முன்னிட்டு நாடு முழுவதும் பாதுகாப்பு ஏற்பாடுகள் மேம்படுத்தப்பட்டுள்ளதாக...

மாலைதீவில் தமது பணியை ஆரம்பித்த ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ்

ஸ்ரீ லங்கன் ஏர்லைன்ஸ் விமான சேவையானது மாலைத்தீவின் மாலேவில் உள்ள வேலானா...

பாராளுமன்ற அலுவல்கள் குழுவிற்கு நீண்ட விடுமுறை

சபாநாயகரின் அனுமதியுடன்பாராளுமன்ற ஊழியர்களுக்கு டிசம்பர் 22 மற்றும் 23 ஆம் திகதிகளில்...