கொழும்பில் உள்ள அனைத்து வர்த்தக நிலையங்களையும் மூடுமாறு மேயர் ரோசி சேனநாயக்க வேண்டுகோள்

Date:

கொழும்பின் அனைத்து வர்த்தக நிலையங்களையும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மூடுமாறு மேயர் ரோசி சேனநாயக்க வேண்டுகோள் விடுத்துள்ளார்.
கொரோனாவை கட்டுப்படுத்துவதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வர்த்தக நிலையங்களை சில நாட்களிற்கு மூடவேண்டும் என நான் வேண்டுகோள் விடுக்கின்றேன் என அவர் தெரிவித்துள்ளார்.
கொழும்பு நகரில் அடையாளம் காணப்பட்ட நோயாளிகளில் 96 வீதமானவர்கள் டெல்டா வைரசினால் பாதிக்கப்பட்டவர்கள் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
அனைத்து கடைகளையும் மூடுவது என்ற வர்த்தக சங்கங்களின் முடிவை வரவேற்றுள்ள மேயர் அவர்கள் தங்கள் வருமானம் குறித்து சிந்திக்காமல் கொவிட்டினை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளிற்கு ஆதரவளித்துள்ளனர் எனவும் தெரிவித்துள்ளார்.
2020 ஜனவரிக்குள் கொரோனா வைரஸ் காரணமாக 30,000 பேர் உயிரிழக்கும் ஆபத்துள்ளதாக உலக சுகாதார ஸ்தாபனம் அறிவித்துள்ளதை தீவிரமாக எடுக்கவேண்டும் என மேயர் தெரிவித்துள்ளார்.

Popular

More like this
Related

கொழும்பு பல்கலைக்கழகத்தில் நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு

நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களை கௌரவிக்கும் சிறப்பு...

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகள் வெளியானது

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகளைக் கல்வி அமைச்சு...

டிரம்பின் ‘அமைதித் திட்டம்’ வெற்றியளிக்குமா?

உண்மையில் காசா பகுதியை உள்ளடக்கிய மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் மோதல் அக்டோபர்...

பிரதமர் சீனாவிற்கு விஜயம்

“பெண்கள் மீதான உலகளாவிய தலைவர்கள் கூட்டத்தில்” கலந்து கொள்வதற்காக பிரதமர் கலாநிதி...