கொழும்பில் உள்ள அனைத்து வர்த்தக நிலையங்களையும் மூடுமாறு மேயர் ரோசி சேனநாயக்க வேண்டுகோள்

Date:

கொழும்பின் அனைத்து வர்த்தக நிலையங்களையும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மூடுமாறு மேயர் ரோசி சேனநாயக்க வேண்டுகோள் விடுத்துள்ளார்.
கொரோனாவை கட்டுப்படுத்துவதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வர்த்தக நிலையங்களை சில நாட்களிற்கு மூடவேண்டும் என நான் வேண்டுகோள் விடுக்கின்றேன் என அவர் தெரிவித்துள்ளார்.
கொழும்பு நகரில் அடையாளம் காணப்பட்ட நோயாளிகளில் 96 வீதமானவர்கள் டெல்டா வைரசினால் பாதிக்கப்பட்டவர்கள் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
அனைத்து கடைகளையும் மூடுவது என்ற வர்த்தக சங்கங்களின் முடிவை வரவேற்றுள்ள மேயர் அவர்கள் தங்கள் வருமானம் குறித்து சிந்திக்காமல் கொவிட்டினை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளிற்கு ஆதரவளித்துள்ளனர் எனவும் தெரிவித்துள்ளார்.
2020 ஜனவரிக்குள் கொரோனா வைரஸ் காரணமாக 30,000 பேர் உயிரிழக்கும் ஆபத்துள்ளதாக உலக சுகாதார ஸ்தாபனம் அறிவித்துள்ளதை தீவிரமாக எடுக்கவேண்டும் என மேயர் தெரிவித்துள்ளார்.

Popular

More like this
Related

இலங்கை – பாலஸ்தீனம் இடையிலான நட்புறுதியை மேலும் வலுப்படுத்த இருநாடுகள் உறுதி!

இலங்கை மற்றும் பாலஸ்தீனம் இடையிலான நீண்டகால இருதரப்பு நட்புறவை மேலும் வலுப்படுத்தும்...

22வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டமூலம் மீதான விவாதம் செப்டம்பர் 24, 25 இல்!

22வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டமூலம் மற்றும் நீதிமன்ற அமைப்புகள் (திருத்த) சட்டமூலம்...

ஞானசார தேரருக்கு வழங்கப்பட்ட ஜனாதிபதி பொதுமன்னிப்பு இரத்து!

பொது பல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார...

துமிந்த திஸாநாயக்கவுக்கு குற்றப்பத்திரிகை தாக்கல்!

தங்க முலாம் பூசப்பட்ட துப்பாக்கி கண்டெடுக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் முன்னாள் அமைச்சர்...