கொழும்பில் உள்ள அனைத்து வர்த்தக நிலையங்களையும் மூடுமாறு மேயர் ரோசி சேனநாயக்க வேண்டுகோள்

Date:

கொழும்பின் அனைத்து வர்த்தக நிலையங்களையும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மூடுமாறு மேயர் ரோசி சேனநாயக்க வேண்டுகோள் விடுத்துள்ளார்.
கொரோனாவை கட்டுப்படுத்துவதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வர்த்தக நிலையங்களை சில நாட்களிற்கு மூடவேண்டும் என நான் வேண்டுகோள் விடுக்கின்றேன் என அவர் தெரிவித்துள்ளார்.
கொழும்பு நகரில் அடையாளம் காணப்பட்ட நோயாளிகளில் 96 வீதமானவர்கள் டெல்டா வைரசினால் பாதிக்கப்பட்டவர்கள் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
அனைத்து கடைகளையும் மூடுவது என்ற வர்த்தக சங்கங்களின் முடிவை வரவேற்றுள்ள மேயர் அவர்கள் தங்கள் வருமானம் குறித்து சிந்திக்காமல் கொவிட்டினை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளிற்கு ஆதரவளித்துள்ளனர் எனவும் தெரிவித்துள்ளார்.
2020 ஜனவரிக்குள் கொரோனா வைரஸ் காரணமாக 30,000 பேர் உயிரிழக்கும் ஆபத்துள்ளதாக உலக சுகாதார ஸ்தாபனம் அறிவித்துள்ளதை தீவிரமாக எடுக்கவேண்டும் என மேயர் தெரிவித்துள்ளார்.

Popular

More like this
Related

ஈஸ்டர் தாக்குதல் மட்டும்தான் உலகின் ஒரே பயங்கரவாதத் தாக்குதலா?: ஞானசார தேரர்

2019ஆம் ஆண்டு நடைபெற்ற ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பாகக் கைது...

இலங்கை உட்பட 10 நாடுகளைச் சேர்ந்த வீட்டுப் பணியாளர்களுக்கு மட்டும் குவைத் அனுமதி!

வீட்டுப் பணியாளர்களைப் பணியமர்த்துவது தொடர்பான புதிய விதிமுறைகளை வளைகுடா நாடான குவைத்...

ஈஸ்டர் தற்கொலை குண்டுத்தாரிகளுடன் சுரேஸ் சலே நேரடியாக தொடர்புக் கொண்டுள்ளார்: அமைச்சர் வெளியிட்ட தகவல்!

உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் சம்பவத்துக்கு 03 வாரத்துக்கு முன்னர் சுரேஸ் சலே,...