கொவிட் தடுப்பூசி 3 ஆவது டோஸின் தேவை குறித்து ஒக்டோபரில் ஆராயப்படும்

Date:

நாட்டில் கொவிட் வைரஸ் வேகமாக பரவிக்கொண்டிருக்கும் தற்போதைய சூழ்நிலையில் தடுப்போசி ஒரு முக்கியமான பங்களிப்பை செய்கிறது எனவே,ஒக்டோபர் மாதத்தில் கொவிட் 19 வைரஸ் தொற்றுக்கெதிரான 3 ஆவது டோஸின் தேவை தொடர்பில் ஆராயப்படும் என்று அரச மருந்தாக்கல் கூட்டுத்தாபனத்தின் தலைவர் விசேட வைத்தியர் பிரசன்ன குணசேன தெரிவித்துள்ளார்.

ஒக்டோபர் மாதம் அளவில் நாட்டின் சகலருக்கும் தடுப்பூசியை ஏற்றும் பணியை நிறைவு செய்யத் திட்டமிடப்பட்டிருப்பதாகவும் அவர் கூறினார்.

இந்த மாதம் இறுதியளவில் 30 வயதிற்கு மேற்பட்ட சகலருக்கும் தடுப்பூசி ஏற்றுவதற்குத் திட்டமிட்டிருக்கின்றது.

தற்சமயம் ஒரு கோடி 20 லட்சத்திற்கு மேற்பட்டவர்களுக்கு முதல் டோஸ் ஏற்றப்பட்டிருக்கின்றது. இரண்டு தடுப்பூசிகளை பெற்றுக்கொண்டோரின் மொத்த எண்ணிக்கை 60 லட்சத்தைக் கடந்திருப்பதாகவும் விசேட வைத்தியர் பிரசன்ன குணசேன மேலும் தெரிவித்தார்.

Popular

More like this
Related

நாசர் மருத்துவமனை மீது இஸ்ரேல் மனிதாபிமானமற்ற தாக்குதல்: அல் ஜஸீரா ஊடகவியலாளர் நால்வர் பலி

காசாவில் தொடர்ந்தும் நடைபெறும் இஸ்ரேல் தாக்குதல்களில் 4 ஊடகவியலாளர் உள்ளிட்ட குறைந்தது...

சவூதி அரேபியாவில் உள்ள இலங்கை தொழிலாளர்களுக்காக நடமாடும் சேவை!

சவூதி அரேபியாவில் உள்ள இலங்கை புலம்பெயர் தொழிலாளர்களுக்காக ஹாயில் பிராந்தியத்திற்கான நடமாடும்...

குருக்கள்மடம் மனிதப் புதைகுழி வழக்கு : 35 வருட புதைகுழியைத் தோண்டுவதற்கு நீதிமன்று அனுமதி்

தமிழர் விடுதலைப் போராட்டத்தின் போது கடத்திச் செல்லப்பட்டு கொலை செய்யப்பட்ட 168...

நளின், மஹிந்தானந்தவின் பிணை மனு ஒத்திவைப்பு

கடூழிய சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர்களான மஹிந்தானந்த அலுத்கமகே மற்றும்...