தபால் மூலமாக கிளினிக் மருந்துகளை வழங்க நடவடிக்கை

Date:

நாட்டில் தற்போது வீரியமாக பரவிக்கொண்டிருக்கும் கொவிட் வைரஸ் தொற்று காரணமாக அரசாங்க மருத்துவமனைகளின் கிளினிக்குகளில் சிகிச்சை பெறும் நோயாளிகளுக்கு தபால் மூலம் தேவையான மருந்துகளை வழங்குவதற்கான கூட்டுத் திட்டத்தை சுகாதார அமைச்சும் அஞ்சல் திணைக்களமும் மீண்டும் தொடங்கியுள்ளன.
மருந்துகள் தேவைப்படும் நோயாளிகள் கிளினிக் செல்லும் மருத்துவமனைக்கு அழைத்து தேவையான தகவல்களை வழங்கி மருந்துகளை வீட்டுக்குப் பெறலாம் என்று சுகாதார அமைச்சின் பிரதிப் பணிப்பாளர் நாயகம் மருத்துவர் சம்பிக்க விக்கிரமசிங்க நேற்று (25) தெரிவித்தார்.
அழைப்பு மூலம் வழங்கப்பட்ட தகவல்களின்படி, நோயாளிகளின் வீடுகளுக்கு மருந்துகள் விநியோகிக்கப்பட்டு வருகின்றன என்று அவர் கூறினார். சிங்கள மொழியில் 072 0720720 மற்றும் தமிழில் 072 0606060 என்ற தொலைபேசி இலக்கங்களில் தொடர்புகொண்டு தேவையான தகவல்களைப் பெற்றுக்கொள்ள முடியும் என பிரதிப் பணிப்பாளர் நாயகம் குறிப்பிட்டார். கொவிட் முதல் மற்றும் இரண்டாவது அலையின் போது, ​​சுகாதார அமைச்சு அஞ்சல் திணைக் களத்துடன் இணைந்து இந்தத் திட்டத்தை செயற்படுத்தியது.

Popular

More like this
Related

இன்று முதல் முச்சக்கர வண்டி கட்டணங்களில் மாற்றம்

ஒரு கிலோ மீட்டருக்கான முச்சக்கர வண்டி கட்டணத்தை 10 ரூபாவினால் அதிகரிப்பதற்கு...

பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் அநீதியான கைது: உச்ச நீதிமன்றத்தில் மாவனல்லை இளைஞருக்குக் கிடைத்த நீதி.

மாவனல்லைப் பகுதியைச் சேர்ந்த 21 வயதுடைய முகமது ரிஃபாய் முகமது சுஹைல்...

பாண் உள்ளிட்ட பேக்கரி உற்பத்திப் பொருட்களின் விலை உயர்வு!

இன்று நள்ளிரவு முதல் 450 கிராம் எடையுள்ள ஒரு இறாத்தல் பாணின்...

பாகிஸ்தானின் 86-வது தேசிய தினம்: இலங்கையில் விமரிசையான கொண்டாட்டம்!

இலங்கையில் வாழும் பாகிஸ்தானிய சமூகம் மற்றும் இலங்கையிலுள்ள பாகிஸ்தான் உயர்ஸ்தானிகராலயம் பாகிஸ்தானின்...