பலாங்கொடை நகருக்கு 5 நாட்களுக்கு பூட்டு!

Date:

பலாங்கொடை நகரில் உள்ள மருந்தகங்கள் மற்றும் ரயர் கடைகளைத் தவிர்ந்த ஏனைய அனைத்து வர்த்தக நிலையங்களும் நாளை (18) தொடக்கம் 22ஆம் திகதிவரை மூடப்படுவதாக பலாங்கொடை வர்த்தக சங்கம் அறிவித்துள்ளது.

குறித்த சங்கத்தின் கலந்துரையாடல் இன்று (16) இடம்பெற்ற போதே இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதாக அச்சங்கத்தின் தலைவர் நகரசபை உறுப்பினர் லால் கலப்பதிதி
தெரிவித்தார்.

இவ்வாறு வர்த்தக நிலையங்களை மூடுவதன்
ஊடாக நகருக்கு வருகைத்தரும் மக்களின்
எண்ணிக்கையை கட்டுப்படுத்த முடியுமெனவும்,
இதனூடாக கொரோனா வைரஸ் பரவலைக்
கட்டுப்படுத்த முடியுமெனவும் நம்பிக்கை
வெளியிட்டார்.

அத்தோடு, வர்த்தக நிலையங்களில் கடமையாற்றும் ஊழியர்களின் பாதுகாப்பும் உறுதி செய்யப்படும் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

Popular

More like this
Related

நாட்டின் பல்வேறு பகுதிகளில் காற்றின் தரம் குறித்து அவதானம்

நாட்டின் பல்வேறு பகுதிகளில் காற்றின் தரம் குறித்து அவதானம் செலுத்தப்பட்டுள்ளது. நாட்டின் வடக்கு,...

சிப் அபகஸ் புத்தளம் கிளையைச் சேர்ந்த மாணவர்கள் 52 விருதுகளைத் தம் வசப்படுத்திக் கொண்டனர்.

-எம்.யூ.எம்.சனூன் கொழும்பு சுகததாச உள்ளக விளையாட்டரங்கில் அண்மையில் (14) நடைபெற்ற அகில இலங்கை...

அதிபரை விழா மேடையில் விமர்சித்த மாணவி:அறிக்கை கோரியுள்ள கல்வியமைச்சு

தற்போது சமூக ஊடகங்களில் பேசும்பொருளாக மாறியுள்ள கொழும்பு சிறிமாவோ பண்டாரநாயக்க கல்லூரி...

பெரும்பாலான பகுதிகளில் மழையற்ற வானிலை

இன்றையதினம் (22) நாட்டின் ஊவா மாகாணத்திலும் அம்பாறை, மட்டக்களப்பு, மாத்தளை, நுவரெலியா,...