பலாங்கொடை நகருக்கு 5 நாட்களுக்கு பூட்டு!

Date:

பலாங்கொடை நகரில் உள்ள மருந்தகங்கள் மற்றும் ரயர் கடைகளைத் தவிர்ந்த ஏனைய அனைத்து வர்த்தக நிலையங்களும் நாளை (18) தொடக்கம் 22ஆம் திகதிவரை மூடப்படுவதாக பலாங்கொடை வர்த்தக சங்கம் அறிவித்துள்ளது.

குறித்த சங்கத்தின் கலந்துரையாடல் இன்று (16) இடம்பெற்ற போதே இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதாக அச்சங்கத்தின் தலைவர் நகரசபை உறுப்பினர் லால் கலப்பதிதி
தெரிவித்தார்.

இவ்வாறு வர்த்தக நிலையங்களை மூடுவதன்
ஊடாக நகருக்கு வருகைத்தரும் மக்களின்
எண்ணிக்கையை கட்டுப்படுத்த முடியுமெனவும்,
இதனூடாக கொரோனா வைரஸ் பரவலைக்
கட்டுப்படுத்த முடியுமெனவும் நம்பிக்கை
வெளியிட்டார்.

அத்தோடு, வர்த்தக நிலையங்களில் கடமையாற்றும் ஊழியர்களின் பாதுகாப்பும் உறுதி செய்யப்படும் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

Popular

More like this
Related

இன்று முதல் முச்சக்கர வண்டி கட்டணங்களில் மாற்றம்

ஒரு கிலோ மீட்டருக்கான முச்சக்கர வண்டி கட்டணத்தை 10 ரூபாவினால் அதிகரிப்பதற்கு...

பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் அநீதியான கைது: உச்ச நீதிமன்றத்தில் மாவனல்லை இளைஞருக்குக் கிடைத்த நீதி.

மாவனல்லைப் பகுதியைச் சேர்ந்த 21 வயதுடைய முகமது ரிஃபாய் முகமது சுஹைல்...

பாண் உள்ளிட்ட பேக்கரி உற்பத்திப் பொருட்களின் விலை உயர்வு!

இன்று நள்ளிரவு முதல் 450 கிராம் எடையுள்ள ஒரு இறாத்தல் பாணின்...

பாகிஸ்தானின் 86-வது தேசிய தினம்: இலங்கையில் விமரிசையான கொண்டாட்டம்!

இலங்கையில் வாழும் பாகிஸ்தானிய சமூகம் மற்றும் இலங்கையிலுள்ள பாகிஸ்தான் உயர்ஸ்தானிகராலயம் பாகிஸ்தானின்...