பாடசாலைகள் திறக்கப்படுமா? | அமைச்சர் G.L.பீரிஸ்

Date:

பாடசாலை மாணவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வரை, பாடசாலைகளை திறக்க முடியாது என கல்வி அமைச்சர் G.L.பீரிஸ் தெரிவிக்கின்றார். கொழும்பில் இன்று (09) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்தார் .

மேலும், நாட்டில் தற்போது காணப்படுகின்ற கொவிட் அசாதாரய சூழ்நிலை காரணமாக, முன்னர் திட்டமிட்டவாறு செப்டம்பர் மாத முதல் வாரத்தில் பாடசாலைகளை திறக்க முடியாது என அவர் கூறியுள்ளார். கல்விசார் ஊழியர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டிருந்த போதிலும், மாணவர்களின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட வேண்டும் என அவர் குறிப்பிடுகின்றார்.

பாடசாலைகளை மீள திறப்பது தொடர்பில் சுகாதார தரப்புடன் பேச்சுவார்த்தைகளை நடத்தி வருவதாகவும், சுகாதார தரப்பு அனுமதி வழங்கியவுடன் பாடசாலைகளை திறக்க நடவடிக்கை எடுக்கப்படும் என G.L.பீரிஸ் தெரிவிக்கின்றார்.

Popular

More like this
Related

மத மற்றும் கலாசார விவகாரங்களுக்கான புதிய பிரதி அமைச்சராக முனீர் முலஃபர் கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டார்

மத மற்றும் கலாச்சார விவகாரங்களுக்கான புதிய பிரதி அமைச்சராக  முனீர் முலாஃபர்...

பாலின சமத்துவத்தை முழுமையாக அடைய தொடர்ச்சியான அர்ப்பணிப்பு தேவை: பிரதமர்

பெண்கள் மற்றும் பெண் பிள்ளைகளின் உரிமைகள் மற்றும் நல்வாழ்வை முன்னேற்றுவதற்கும், சமத்துவம்...

கல்வி சீர்திருத்தங்களின் கீழ் பாடசாலை நேரம் நீடிப்பு: கல்வியமைச்சு

நடைமுறைப்படுத்தப்படவுள்ள கல்வி சீர்திருத்தங்களின் கீழ் பாடசாலை நேரம் பிற்பகல் 2 மணி...

கல்கிஸ்ஸை சட்டத்தரணி தாக்குதல் சம்பவம்; பொலிஸ் அதிகாரிக்கு பிணை

கல்கிஸ்ஸை நீதிமன்ற வளாகத்திற்குள் பொலிஸ் அதிகாரியொருவர் சட்டத்தரணியொருவரைத் தாக்கிய சம்பவம் தொடர்பாக...