புகைப்பிடித்தல் மற்றும் மதுபானம் அருந்துவதால் கொவிட் தொற்று உறுதியாகும் வீதம் அதிகரிக்கும்!

Date:

நாட்டில் நாளாந்தம் 16 இலட்சத்துக்கும் மேற்பட்டோர் புகைப்பிடித்தல் செயற்பாடுகளில் ஈடுபடுவதாக தெரியவந்துள்ளது.

 

மதுசாரம் மற்றும் போதைப்பொருள் தகவல் நிலையத்தின் தரவுகளில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.அத்துடன், நாளாந்தம் 15 வயதுக்கு குறைவான சுமார் 4,000 சிறுவர்கள் புகைப்பிடித்தல் நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றமை தெரியவந்துள்ளது.

 

இதேவேளை, புகைபிடித்தல் மற்றும் மதுபானம் அருந்துவதன் காரணமாக கொவிட்-19 தொற்று உறுதியாகும் வீதம் அதிகரிப்பதாக சுகாதார அமைச்சின் கொவிட்-19 சம்பந்தமான பிரதான இணைப்பாளரும், சுகாதார சேவைகள் தொழிநுட்ப பிரிவின் பணிப்பாளருமான வைத்தியர் அன்வர் ஹம்தானி தெரிவித்தார்.

 

அத்துடன், குறித்த செயற்பாடுகள் காரணமாக நோய் எதிர்ப்பு சக்தி குறைவடைவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Popular

More like this
Related

எகிப்தில் காசா போர் நிறுத்த மாநாட்டுக்கு செல்லும் வழியில் 3 கத்தார் தூதர்கள் விபத்தில் சிக்கி பலி

எகிப்தின் கடற்கரை நகரமான சர்ம் எல்-ஷேக்கிற்கு அருகில் நடந்த கார் விபத்தில்...

சீனாவின் பெய்ஜிங் நகரை சென்றடைந்தார் பிரதமர் ஹரிணி!

2025ஆம் ஆண்டுக்கான மகளிர் உலகத் தலைவர்கள் உச்சி மாநாட்டில் கலந்து கொள்வதற்காக...

இலங்கை புலம்பெயர் தொழிலாளர்கள் மூலம் 695.7 மில்லியன் டொலர் வரவு!

இந்த ஆண்டு செப்டம்பரில் இலங்கை புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் நாட்டிற்கு மொத்தம் 695.7...

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பி.ப.1.00 மணிக்கு பின் மழை

இன்றையதினம் (13) நாட்டின் மேல், சப்ரகமுவ, தென், வடமேல் மாகாணங்களிலும் மன்னார்...