மோட்டார் வாகனத் திணைக்களத்தின் விசேட அறிவிப்பு!

Date:

மோட்டார் வாகனத் திணைக்களத்தின் நாராஹேனபிட்டி மற்றும் வேரகல அலுவலகங்களின் ஊடாக வழங்கப்படும் சேவைகள் எதிர்வரும் புதன்கிழமை தொடக்கம் தற்காலிகமாக நிறுத்தப்படவுள்ளது.

திணைக்கள பணியாளர்கள் பலருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளமை இதற்கான காரணமாகும். தொலைபேசியின் மூலம் நேரத்தை ஒதுக்கிக் கொண்ட அனைத்து சேவைகளும் ரத்து செய்யப்பட்டுள்ளதாக மோட்டார் வாகன போக்குவரத்து ஆணையாளர் நாயகம் சுமித் சி கே அலஹகோன் தெரிவித்துள்ளார்.

வாகனங்களை பதிவு செய்தல் ஒதுக்கீடு செய்வது தொடர்பாக 0707 677 877 என்ற தொலைபேசியின் ஊடாகவும், சாரதி அனுமதிப் பத்திரம் தொடர்பாக 0707 677 977 என்ற தொலைபேசியின் ஊடாகவும் தொடர்புகொள்ள முடியும்.

இதேவேளை, தென், மத்திய, சப்ரகமுவ மாகாணங்களின் வாகன வருமான வரி பத்திரம் வழங்கும் நடவடிக்கையும் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளன. காலாவதியாகும் வருமானவரிப் பத்திரத்திற்காக அவற்றை புதுப்பிக்கும் போது அதற்கான தண்டப்பணம் அறவிடப்பட மாட்டாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Popular

More like this
Related

தேசப் பற்றுக்கு நபிகளார் ஒரு குறியீடு: சுதந்திர தின விசேட கட்டுரை!

முஹம்மத் பகீஹுத்தீன் பிறந்த மண்ணையும் தேசத்தையும் நேசிப்பது மனிதனிடம் உள்ள ஒரு இயற்கையான...

இனவாதம் மற்றும் மதவாதம் அற்ற சமத்துவ சமூகமே எமது இலக்கு: பிரதமர் உறுதி.

78 ஆவது தேசிய சுதந்திர தினத்தை ஒரு புதிய சுதந்திரம் குறித்த...

பேரண்டப் பொருளாதார நன்மைகள் அனைத்து இன மக்களையும் சென்றடைய வேண்டும் – ஜனாதிபதி அநுர

கடந்த நூற்றாண்டில் தவறவிட்ட வெற்றிகளை நாட்டுக்குப் பெற்றுக்கொடுத்து, அனைவரினதும் கனவான, ‘வளமான...

புதிய கணக்காய்வாளர் நாயகமாக சமுதிகா ஜயரத்ன

சிரேஷ்ட பிரதி கணக்காய்வாளர் நாயகமாகப் பணியாற்றும் எல்.எஸ்.ஐ. ஜயரத்னவை புதிய கணக்காய்வாளர்...