அஜித் நிவர்ட் கப்ரால் தனது அமைச்சுப் பதவியையும் பாராளுமன்ற உறுப்பினர் பதவியையும் கைவிடுவாரா?

Date:

இராஜாங்க நிதி அமைச்சர் அஜித் நிவர்ட் கப்ரால் தனது இராஜாங்க அமைச்சர் மற்றும் தேசியப்பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து விலக தீர்மானித்துள்ளதாக பிரபல சிங்கள பத்திரிகையான லங்கதீப இன்று தெரிவித்துள்ளது.

தற்போதைய மத்திய வங்கியின் ஆளுநர் பேராசிரியர் டபிள்யூ. டி லக்ஷ்மன் சர்வதேச நாணய நிதியத்தின் உயர் பதவிக்கு நியமிக்கப்படுவார் என்றும் செய்தியில் தெரிவிக்கப்படுகின்றது. மத்திய வங்கியின் தற்போதைய ஆளுநர் இராஜினாமா செய்ததைத் தொடர்ந்து, திரு கப்ரால் தனது தற்போதைய பதவியில் இருந்து விலகுவார் என்று அரசாங்கத்திற்கு ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளதாக அந்த அறிக்கை மேலும் தெரிவிக்கப்படுகின்றது.

Popular

More like this
Related

நிரந்தர சமாதானத்திற்கு மாவட்ட சர்வமத அமைப்புக்களின் பங்களிப்பு குறித்து விளக்கிய மாகாண மட்ட கலந்துரையாடல்!

இலங்கை தேசிய சமாதான பேரவை ஏற்பாடு செய்த நல்லிணக்கம் மற்றும் சமூக...

தொடர்ந்து பெய்து வரும் மழையால் எலிக்காய்ச்சல் பரவும் அபாயம்

நாட்டில் தொடர்ந்து பெய்து வரும் மழையால் எலிக்காய்ச்சல் பரவும் அபாயம் அதிகரித்துள்ளதாக...

ரியாதில் உலக சாதனை படைத்த இலங்கை சர்வதேச பாடசாலை மாணவர்களுக்கு இலங்கைத் தூதர் அமீர் அஜ்வத் வழங்கிய சிறப்பு கௌரவிப்பு

சவூதி அரேபியாவின் இலங்கைத் தூதரும் ரியாதிலுள்ள இலங்கை சர்வதேச பாடசாலையின் (SLISR)...

30 மணி நேரத்திற்குள் மழை மற்றும் காற்றுடனான காலநிலை அதிகரிக்க கூடும்!

தென்மேற்கு வங்காள விரிகுடாவில் நிலைகொண்டிருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி நேற்று...