இந்தியன் பிரீமியர் லீக் தொடரின் 43 ஆவது போட்டியில் பெங்களூர் ரோயல் செலஞ்சர்ஸ் அணி 07 விக்கெட்டுக்களால் வெற்றி!

Date:

இந்தியன் பிரீமியர் லீக் தொடரின் 43 ஆவது போட்டியில் பெங்களூர் ரோயல் செலஞ்சர்ஸ் அணி 07 விக்கெட்டுக்களால் வெற்றி பெற்றுள்ளது.ராஜஸ்தான் ரோயல்ஸ் அணிக்கு எதிரான இந்த போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற பெங்களூர் ரோயல் செலஞ்சர்ஸ் அணி முதலில் களத்தடுப்பை தேர்வு செய்தது.

இதற்கமைய, முதலில் துடுப்பெடுத்தாடிய ராஜஸ்தான் ரோயல்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 09 விக்கெட்டுக்களை இழந்து 149 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.அணிசார்பில் அதிகபடியாக எவின் லூயிஸ் 58 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார்.பந்துவீச்சில் பெங்களூர் ரோயல் செலஞ்சர்ஸ் அணியின் ஹர்ஷல் படெல் 34 ஓட்டங்களுக்கு 03 விக்கெட்டுக்களை கைப்பற்றினார்.

இந் நிலையில், 150 என்ற வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய பெங்களூர் ரோயல் செலஞ்சர்ஸ் அணி 17.1 ஓவர்கள் நிறைவில் 03 விக்கெட்டுக்களை மாத்திரம் இழந்து வெற்றி இலக்கை அடைந்தது.

அணிசார்பில் அதிகபடியாக கிளென் மெக்ஸ்வெல் ஆட்டமிழக்காமல் 50 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார்.பந்துவீச்சில் ராஜஸ்தான் ரோயல்ஸ் அணியின் முஸ்தபிசுர் ரஹ்மான் 20 ஓட்டங்களுக்கு 02 விக்கெட்டுக்களை கைப்பற்றியமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

வடக்கு, கிழக்கு, ஊவா, வடமத்திய பகுதிகளில் பல தடவை மழை!

இன்றையதினம் (05) நாட்டின் வடக்கு, கிழக்கு, ஊவா, வடமத்திய, மத்திய மாகாணங்களிலும்...

தேசப் பற்றுக்கு நபிகளார் ஒரு குறியீடு: சுதந்திர தின விசேட கட்டுரை!

முஹம்மத் பகீஹுத்தீன் பிறந்த மண்ணையும் தேசத்தையும் நேசிப்பது மனிதனிடம் உள்ள ஒரு இயற்கையான...

இனவாதம் மற்றும் மதவாதம் அற்ற சமத்துவ சமூகமே எமது இலக்கு: பிரதமர் உறுதி.

78 ஆவது தேசிய சுதந்திர தினத்தை ஒரு புதிய சுதந்திரம் குறித்த...

பேரண்டப் பொருளாதார நன்மைகள் அனைத்து இன மக்களையும் சென்றடைய வேண்டும் – ஜனாதிபதி அநுர

கடந்த நூற்றாண்டில் தவறவிட்ட வெற்றிகளை நாட்டுக்குப் பெற்றுக்கொடுத்து, அனைவரினதும் கனவான, ‘வளமான...