(அர்கம் அன்ஸார் – களுத்துறை)
60 வயதிற்கு மேற்பட்டவர்களிற்கான கொவிட்( சய்னபாம்) தடுப்பூசி ஏற்றல் கடந்த 31/08/2021 களுத்துறையில் இடம்பெற்றது. களுத்துறை நகர பிதா மொஹமட் ஆமிர் நஸீர் அவர்களின் வேண்டுகோளுக்கிணங்க இராணுவத்தினரால் இந்த ஏற்பாடு செய்யப்பட்டது.
ஆரம்ப கட்டமாக 727/B மற்றும் 727/C ஆகிய கிராம உத்தியோகத்தர் பிரிவுகளுக்கு உற்பட்ட களுத்துறை மரிக்கார் வீதி , மபூர் கிரசன்ட் , அல்விஸ் பிலேஸ் , துவ பன்ஸல வீதி ஆகிய பிரதேசங்களில் தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கை இடம்பெற்றது
இதற்காக அப்பிரதேச மக்கள் முழுமையான பங்களிப்புக்களை வழங்கியதாக அறியக் கிடைக்கிறது.இதனை திறன்பட ஒழுங்கு செய்வதில் மொஹமட் ஸாதாத் ( chairman of Community police kalutara / Member of KDC ) , மொஹமட் இஸ்ஸத் , மொஹமட் ரிஷாட் , மொஹமட் ஹரீஸ் ஆகியவர்கள் தங்களது முழு ஒத்துழைப்பையும் வழங்கியமை குறிப்பிடத்தக்கது.