களுத்துறை மாவட்டத்தின் பல பகுதிகளில் நாளை நீர் வெட்டு!

Date:

களுத்துறை மாவட்டத்தின் பல பகுதிகளில் நாளை(10) காலை 8 மணி முதல் 18 மணி நேர நீர் விநியோகம் இடைநிறுத்தப்படும் என்று தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.

அதன்படி, வாத்துவ, வஸ்கடுவ, பொதுப்பிட்டிய, களுத்துறை வடக்கு மற்றும் தெற்கு, கட்டுகுருந்த, நாகொட மற்றும் பெந்தோட்டை ஆகிய பிரதேசங்களுக்கான நீர் விநியோகம் இடை நிறுத்தப்படவுள்ளது.

மேலும், நாளை காலை 8 மணி முதல் மறுநாள் அதிகாலை 2 மணிவரை பயாகல, போம்புவல, மக்கொன, பேருவளை,தர்கா நகர், அளுத்கம, பிலமினாவத்த, களுவாமோதர மற்றும் மொரகல்ல ஆகிய இடங்களில் நீர்வெட்டு அமுலில் இருக்குமென தெரிவிக்கப்பட்டுள்ளது.

Popular

More like this
Related

ஈஸ்டர் தாக்குதல் மட்டும்தான் உலகின் ஒரே பயங்கரவாதத் தாக்குதலா?: ஞானசார தேரர்

2019ஆம் ஆண்டு நடைபெற்ற ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பாகக் கைது...

இலங்கை உட்பட 10 நாடுகளைச் சேர்ந்த வீட்டுப் பணியாளர்களுக்கு மட்டும் குவைத் அனுமதி!

வீட்டுப் பணியாளர்களைப் பணியமர்த்துவது தொடர்பான புதிய விதிமுறைகளை வளைகுடா நாடான குவைத்...

ஈஸ்டர் தற்கொலை குண்டுத்தாரிகளுடன் சுரேஸ் சலே நேரடியாக தொடர்புக் கொண்டுள்ளார்: அமைச்சர் வெளியிட்ட தகவல்!

உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் சம்பவத்துக்கு 03 வாரத்துக்கு முன்னர் சுரேஸ் சலே,...