கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 03 விக்கெட்டுக்களால் வெற்றி!

Date:

இந்தியன் பிரீமியர் லீக் தொடரின் 41 ஆவது போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 03 விக்கெட்டுக்களால் வெற்றி பெற்றுள்ளது.

டெல்லி கெப்பிட்டல்ஸ் அணிக்கு எதிரான இந்த போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது.இதற்கமைய, முதலில் துடுப்பெடுத்தாடிய டெல்லி கெப்பிட்டல்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 9 விக்கெட்டுக்களை இழந்து 127 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

அணிசார்பில் அதிகபடியாக ரிஷப் பண்ட் மற்றும் ஸ்டீவ் ஸ்மித் ஆகியோர் தலா 39 ஓட்டங்களைப் பெற்றுக்கொடுத்தனர்.பந்துவீச்சில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் சார்பில் சுனில் நரைன், லோகி பெர்கியூஸன் மற்றும் வெங்கடேஷ் ஐயர் ஆகியோர் தலா 2 விக்கெட்டுக்களை கைப்பற்றினர்.

இந் நிலையில், 128 என்ற வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 18.2 ஓவர்கள் நிறைவில் 07 விக்கெட்டுக்களை இழந்து வெற்றி இலக்கை அடைந்தது.அணிசார்பில் அதிகபடியாக நித்திஷ் ராணா ஆட்டமிழக்காமல் 36 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார்.பந்துவீச்சில் டெல்லி கெப்பிட்டல்ஸ் அணியின் அவேஷ் கான் 13 ஓட்டங்களுக்கு 03 விக்கெட்டுக்களை கைப்பற்றியமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை: மேலதிக வகுப்புகளுக்கு நள்ளிரவு முதல் தடை!

2025 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையை கருத்திற்...

இலஞ்ச ஆணைக்குழுவினரால் சஷீந்திர ராஜபக்ஷ கைது

முன்னாள் விவசாய இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ஷ, இலஞ்சம் அல்லது ஊழல்...

சில மாவட்டங்களில் அவ்வப்போது மழை பெய்யக் கூடிய சாத்தியம்

இன்றையதினம் (06) நாட்டின் மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல் மாகாணங்களிலும் காலி,...

பழம்பெரும் ஈழத்துத் திரைப்பட நடிகரும்,“அபுநானா நாடகப்புகழ்” கலைஞா் எம்.எம்.ஏ. லத்தீப் காலமானாா்.

பழம்பெரும் ஈழத்துத் திரைப்பட நடிகரும், தொலைக்காட்சி “அபுநானா நாடகப்புகழ்” மற்றும் முஸ்லிம்...