சந்தையில் அரிசி தட்டுப்பாடு தீவிரமடையும் – வியாபாரிகள் மற்றும் ஆலை உரிமையாளர்கள் எச்சரிக்கை!

Date:

அரிசி மீது விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாட்டு விலையை மாற்றாவிட்டால் சந்தையில் அரிசி தட்டுப்பாடு தீவிரமடையும் என அரிசி வியாபாரிகள் மற்றும் ஆலை உரிமையாளர்கள் தெரிவிக்கின்றனர்.

இதேவேளை, கட்டுப்பாட்டு விலைக்கு அப்பால் அரிசியை விற்பனை செய்யும் அரிசி விற்பனையாளர்களுக்கு விதிக்கப்பட்ட அபராதம் 100,000 ரூபாவாக உயர்த்தப்பட்டதால், அரிசியை விற்பதில் இருந்து சில வியாபாரிகள் விலகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.அத்தோடு அரிசி சந்தையில் அதிக விலைக்கு விற்கப்படுவதால் நுகர்வோர் விவகார அதிகார சபை அரிசிக்கு அதிகபட்ச சில்லறை விலையை நிர்ணயித்து கடந்த 2 ஆம் திகதி விசேட வர்த்தமானி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது.

ஒரு கிலோ நாட்டரிசியின் அதிகபட்ச சில்லறை விலை 98 ரூபாயாகவும், ஒரு கிலோ சம்பா அரிசி 103 ரூபாவாகவும் மற்றும் ஒரு கிலோ கீரி சம்பா 125 ரூபாவாகவும் விலை நிர்ணயிக்கப்பட்டது.அதைத் தொடர்ந்து, அவசர கால அதிகாரங்களின் கீழ் முன்னணி அரிசி ஆலைகளில் நுகர்வோர் விவகார அதிகார சபையினால் (CAA) கடந்த 22 ஆம் திகதி சுற்றிவளைப்புகள் மேற்கொள்ளப்பட்டு நுகர்வோர் விவகார சட்டத்தில் புதிய திருத்தங்கள் கொண்டு வரப்பட்டது.எனினும் புதிய சட்டத்தின்படி, நுகர்வோர் விவகார சட்டத்தின் கீழ் குற்றங்களுக்கான குறைந்தபட்ச அபராதம் 1,000 ரூபாயிலிருந்து 100,000 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

சபரிமலை யாத்திரை இலங்கை அரசாங்கத்தின் அங்கீகரிக்கப்பட்ட யாத்திரையாக பிரகடனம்

இந்தியாவின் கேரளாவில் உள்ள புகழ்பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு புனித யாத்திரை...

தொடர்ந்தும் தலைமறைவானால் ராஜிதவின் சொத்துக்கள் பறிமுதலாகும்: இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுஆணைக்குழு

முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன தொடர்ந்தும் நீதிமன்றத்தில் ஆஜராகாமல் தலைமறைவானால் அவரது...

முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த காலமானார்!

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் முன்னாள் இராஜாங்க அமைச்சருமான...

யானைகள் இறப்பு விகிதத்தில் உலகளவில் இலங்கை முதலிடம்!

யானைகள் இறப்பு விகிதத்தில் இலங்கை தற்போது உலகிலேயே முதலிடத்தில் உள்ளதாக வனவிலங்கு...