சீமெந்து, பால் மா, எரிவாயு மற்றும் கோதுமை மாவின் விலை தொடர்பான இறுதித் தீர்மானம் திங்கட் கிழமை!

Date:

சீமெந்து, பால் மா, எரிவாயு மற்றும் கோதுமை மாவின் விலை தொடர்பான இறுதி தீர்மானம் எதிர்வரும் திங்கட்கிழமை மாலை நடைபெறும் அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்படும் என்று நுகர்வோர் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவன்ன தெரிவித்துள்ளார்.

சந்தையில் குறித்த பொருட்களின் பற்றாக்குறை இன்னும் இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.சந்தையில் பால் மா பற்றாக்குறை கடந்த ஜூலை மாதம் உருவாக்கப்பட்ட நிலையில் அரசாங்கம் பால் மா இறக்குமதியாளர்களுக்கு நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுத்திருந்தது.

ஆனால் சந்தையில் பால் மாவுக்கு இன்னும் தட்டுப்பாடு இருப்பதாக நுகர்வோர் முறைப்பாடு தெரிவித்து வருகின்றனர்.நுகேகொட ஜூபிலி தூண் பகுதியில் இன்று பால் மா வாங்குவதற்கு நீண்ட வரிசையில் மக்கள் இருந்ததாகவும், வாடிக்கையாளர்களுக்கும் கடையின் ஊழியர்களுக்கும் இடையே கடுமையான வார்த்தைப் பரிமாற்றம் ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது.

அதேபோல், லாஃப் எரிவாயு பற்றாக்குறை இருக்கும் போது விலையை அதிகரிக்க அரசாங்கம் அனுமதி வழங்கி இருந்தது. எனினும் சந்தையில் லாஃப் கேஸ் பற்றாக்குறை இன்னும் நிலவுவதாக பொதுமக்கள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

மாலைதீவில் பணியை தமது ஆரம்பித்த ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ்

ஸ்ரீ லங்கன் ஏர்லைன்ஸ் விமான சேவையானது மாலைத்தீவின் மாலேவில் உள்ள வேலானா...

பாராளுமன்ற அலுவல்கள் குழுவிற்கு நீண்ட விடுமுறை

சபாநாயகரின் அனுமதியுடன்பாராளுமன்ற ஊழியர்களுக்கு டிசம்பர் 22 மற்றும் 23 ஆம் திகதிகளில்...

Operation Hawkeye Strike: சிரியாவில் உள்ள ISIS இலக்குகள் மீது அமெரிக்கா வான்வழித் தாக்குதல்.

சிரியாவில், ஐஎஸ்ஐஎஸ் இலக்குகளைக் குறிவைத்து அமெரிக்கா வான்வழித் தாக்குதல் நடத்தியுள்ளது. சிரியாவின், மத்திய...

இலங்கையின் டிஜிட்டல் மயமாக்கலுக்கு உலக வங்கி நிதியுதவி

இலங்கையின் டிஜிட்டல் மயமாக்கலுக்கு ஆதரவளிக்கும் வகையில் 50 மில்லியன் டொலர் திட்டத்திற்கு...