நாள் ஒன்றுக்கு 5,000 மெட்ரிக் தொன் உணவு வீண் விரயம் -சுற்றாடல் அமைச்சர் மஹிந்த அமரவீ!

Date:

இலங்கையில் நாளொன்றுக்கு சமைத்த மற்றும் சமைக்காத 5,000 மெட்ரிக் தொன் உணவு வீணாக சூழலுடன் சேர்கப்படுவதாக சுற்றாடல் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

உணவு வீண் விரயமாகுதல் மற்றும் உணவு கழிவாக வீண்விரயமாவதை கட்டுப்படுத்தல் குறித்த சர்வதேச விழிப்புணர்வு தினத்தை முன்னிட்டு அமைச்சில் நேற்று நடைபெற்ற நிகழ்வில் இது தொடர்பாக சுற்றாடல் அமைச்சர் மேலும் தெரிவிக்கையில்,

இது பாரிய ஒரு பிரச்சினையாகும். உலகில் உற்பத்தி செய்யப்படும் மக்களின் பாவனைக்கான உணவுப் பொருட்களில் மூன்றில் ஒரு பகுதி வீண்விரயமாவதாக சர்வதேச உணவு மற்றும் விவசாய அமைப்புக்ககளின் தகவல்களில் இருந்து தெரிய வந்துள்ளதாகவும் அமைச்சர் கூறினார்.

2030 ஆம் ஆண்டளவில் 30 சதவீதத்தால் உணவு கழிவை கட்டுப்படுத்துவதற்கு இலக்கு நிர்ணயிக்கபட்டுள்ளதாக அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

நள்ளிரவு முதல் எரிபொருள் விலைகள் அதிகரிப்பு

இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் இன்று (21) நள்ளிரவு 12.00 மணி முதல்...

உலக நாடுகளின் எரிபொருள் விலையேற்றம்

அண்மையில் வெளியான உலக எரிபொருள் விலையேற்றத்திற்கமைய பல நாடுகளில் 20 வீதத்திற்கும்...

இலங்கைக்கான சவூதி அரேபியத் தூதுவரின் பெருநாள் வாழ்த்துச் செய்தி

புனித ஈதுல் பித்ர் நோன்புப் பெருநாளை முன்னிட்டு, இலங்கைக்கான சவூதி அரேபியத்...

ஜனாதிபதியின் ஈகைத் திருநாள் வாழ்த்துச் செய்தி!

உலகெங்கிலும் உள்ள முஸ்லிங்கள் ஒரு மாதம் முழுவதும் நோன்பு நோற்று, அதன்...