பால்மா விலையை 200ரூபாயினால் அதிகரிக்க தீர்மானம்?

Date:

இறக்குமதி செய்யப்பட்ட பால்மாக்களின் விலையை 200ரூபாயினால் அதிகரிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

நிதியமைச்சர் பசில்ராபக்சவுடனான சந்திப்பின் பின்னர் பால்மா இறக்குமதியாளர்கள் இறக்குமதி செய்யப்பட்ட ஒரு கிலோ பால்மாவின் விலையை 200 ருபாயினால் அதிகரிக்க தீhமானித்துள்ளனர்.

நேற்றைய சந்திப்பின்போது பால்மா இறக்குமதியாளர்கள் பல வேண்டுகோளை விடுத்துள்ளனர்.
சர்வதேச உள்நாட்டு சந்தைகளின் நிலவரம் வரிகள் உட்பட பல விடயங்கள் குறித்து ஆராய்ந்த பின்னர் விலைகளை அதிகரிக்க தீர்மானித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இலங்கையின் நாணயம் பெறுமதி இழந்துள்ளதால் சர்வதேச விலைகள் கப்பல்கட்டணங்கள் அதிகரித்துள்ளன என்பதை சுட்டிக்காட்டி பால்மா இறக்குமதியாளர்கள் தொடர்ச்சியாக விலைகளை அதிகரிக்குமாறு வேண்டுகோள் விடுத்துவந்துள்ளனர்.

Popular

More like this
Related

நிரந்தர சமாதானத்திற்கு மாவட்ட சர்வமத அமைப்புக்களின் பங்களிப்பு குறித்து விளக்கிய மாகாண மட்ட கலந்துரையாடல்!

இலங்கை தேசிய சமாதான பேரவை ஏற்பாடு செய்த நல்லிணக்கம் மற்றும் சமூக...

தொடர்ந்து பெய்து வரும் மழையால் எலிக்காய்ச்சல் பரவும் அபாயம்

நாட்டில் தொடர்ந்து பெய்து வரும் மழையால் எலிக்காய்ச்சல் பரவும் அபாயம் அதிகரித்துள்ளதாக...

ரியாதில் உலக சாதனை படைத்த இலங்கை சர்வதேச பாடசாலை மாணவர்களுக்கு இலங்கைத் தூதர் அமீர் அஜ்வத் வழங்கிய சிறப்பு கௌரவிப்பு

சவூதி அரேபியாவின் இலங்கைத் தூதரும் ரியாதிலுள்ள இலங்கை சர்வதேச பாடசாலையின் (SLISR)...

30 மணி நேரத்திற்குள் மழை மற்றும் காற்றுடனான காலநிலை அதிகரிக்க கூடும்!

தென்மேற்கு வங்காள விரிகுடாவில் நிலைகொண்டிருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி நேற்று...