பிளாஸ்டிக் சார்ந்த மேலும் 7 உற்பத்திகளின் தடை ‌தொடர்பில் விரைவில் வர்த்தமானி!

Date:

பிளாஸ்டிக் சார்ந்த மேலும் 7 உற்பத்திகளுக்கு தடை விதிப்பதற்கான வர்த்தமானி அறிவித்தல் விரைவில் வெளியிடப்படும் என சுற்றாடல் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

இந்த விடயம் குறித்து ஊடகங்களுக்கு கருத்துரைத்த அவர் சட்டமா அதிபரின் பரிந்துரைகள் கிடைத்தவுடன் இதற்கான செயற்பாடுகள் முன்னெடுக்கப்படும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.கடந்த மார்ச் மாதம் 31ஆம் திகதி முதல் ஒரு முறை மாத்திரம் பயன்படுத்தக்கூடிய பொலித்தீன் மற்றும் பிளாஸ்டிக் சார்ந்த 5 உற்பத்திகளுக்கு தடைவிதிக்கப்பட்டது.அத்துடன், ஆகஸ்ட் மாதம் முதலாம் திகதி முதல் பொலித்தீன் மூலம் தயாரிக்கப்படும் லன்சீட்களுக்கும் தடை விதிக்கப்பட்டது.

இந்நிலையில் பிளாஸ்டிக்கினால் உற்பத்தி செய்யப்படும் குளிர்பான குவளைகள், இடியப்ப தட்டு, பொலித்தீன் மற்றும் பிளாஸ்டிக்கினால் தயாரிக்கப்படும் மலர் மாலைகள் உள்ளிட்ட 7 வித பொருட்கள் அவற்றில் உள்ளடங்குவதாக சுற்றாடல் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

முஸ்லிம்களின் உலகத்துக்கு மணிமகுடமாக இருப்பது பலஸ்தீனம்.அதை விட்டுவிடாதீர்கள்”: அல் ஜஸீரா செய்தியாளரின் உருக்கமான இறுதிப் பதிவு!

காசாவில் இப்போது இஸ்ரேல் மீண்டும் தாக்குதலைத் தீவிரப்படுத்தியுள்ளது. காசாவை முழுமையாகக் கட்டுப்படுத்த...

கிழக்கு புற்றுநோயாளர் பராமரிப்பு நிலையத்தின் (EASCCA )மாநாட்டு மண்டபம் ஏறாவூரில் திறந்து வைப்பு!

ஏறாவூரில் அமையப் பெற்றுள்ள கிழக்கு புற்றுநோயாளர் பராமரிப்பு நிலையத்தின் EASCCA மாநாட்டு...

சமூகத்துக்கு கொடுக்க வேண்டிய மிக உன்னதமான செய்திகள் இக்கண்காட்சி மூலம் கொடுக்கப்பட்டுள்ளது; மௌலவியா ஜலீலா ஷஃபீக்!

மாவனல்லையில் இயங்கி வருகின்ற மகளிருக்கான உயர் கல்வி நிறுவனமான ஆயிஷா உயர்...

சர்வதேச அல்-குர்ஆன் மனனப் போட்டியில் இலங்கை சார்பில் வெலிகம மத்ரஸதுல் பாரி மாணவன் பங்கேற்பு

முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களமும் சவுதி அரேபியா தூதரகமும் இணைந்து கடந்த...