வாட்சப் நிறுவனத்திற்கு 225 மில்லியன் யூரோ அபராதம்..!

Date:

ஐரோப்பிய ஒன்றியத்தின் தனியுரிமை சட்ட விதிமுறைகளை மீறிய குற்றத்திற்காக, வாட்சப் நிறுவனத்திற்கு, அயர்லாந்தின் தரவு பாதுகாப்பு ஆணையம், 225 மில்லியன் யூரோக்கள் அதாவது இலங்கை மதிப்பில் சுமார் 5310.53 கோடி ரூபாய் அபராதம் விதித்துள்ளது.

2018 ஆம் ஆண்டு முதல் விசாரணை நடத்தி வந்த ஆணையம், கடந்த டிசம்பர் மாதம் அறிக்கை சமர்பித்து இருந்தது. அதில் 50 மில்லியன் யூரோக்கள் வரை அபராதம் விதிக்க முன்மொழிந்து இருந்தது. ஆனால் மற்ற ரெகுலேட்டர்கள் அபராதத்தை உயர்த்த வலியுறுத்தியதை அடுத்து அபராத தொகை 225 மில்லியன் யூரோக்களாக உயர்த்தப்பட்டது.

இதற்கு முன் இந்த அளவு அதிக அபராதம் எந்த நிறுவனத்திற்கும் விதிக்கப்படவில்லை என்று தரவு பாதுகாப்பு ஆணையம் குறிப்பிட்டுள்ளது. இது முற்றிலும் தவறான நடவடிக்கை என்று தெரிவித்துள்ள வாட்சப் நிறுவனம், இந்த உத்தரவை எதிர்த்து மேல்முறையீடு செய்ய இருப்பதாக அறிவித்துள்ளது.

Popular

More like this
Related

கல்கிஸ்ஸை சட்டத்தரணி தாக்குதல் சம்பவம்; பொலிஸ் அதிகாரிக்கு பிணை

கல்கிஸ்ஸை நீதிமன்ற வளாகத்திற்குள் பொலிஸ் அதிகாரியொருவர் சட்டத்தரணியொருவரைத் தாக்கிய சம்பவம் தொடர்பாக...

WHO அமைப்பின் 78ஆவது பிராந்திய மாநாடு இன்று ஆரம்பம்!

உலக சுகாதார அமைப்பின் (WHO) தென் மற்றும் தென்கிழக்கு ஆசியாவிற்கான 78ஆவது...

*பாகிஸ்தான் ஆப்கானிஸ்தான் மோதல் உச்சம்: கத்தார், சவூதி அரேபியாவின் தலையீடு!

பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் இடையே நடந்த தாக்குதலில் பாகிஸ்தான் தரப்பில் சுமார்...

எகிப்தில் காசா போர் நிறுத்த மாநாட்டுக்கு செல்லும் வழியில் 3 கத்தார் தூதர்கள் விபத்தில் சிக்கி பலி

எகிப்தின் கடற்கரை நகரமான சர்ம் எல்-ஷேக்கிற்கு அருகில் நடந்த கார் விபத்தில்...