அரிசி விலையை குறைப்பதற்கான யோசனையை முன்வைக்க தயக்கம் காட்டுவதற்கு என்ன காரணம் -இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்ஹ கேள்வி!

Date:

எதிர்காலத்தில் அரிசி விலை அதிகரிக்கலாம் எனவும், அவ்வாறு அதிகரித்துச் செல்லும் அரிசி விலையை குறைப்பதற்கு முறையான வேலைத்திட்டமொன்றை வகுப்பதற்கு நடவடிக்கைகளை மேற்கொள்ளவுள்ளதாக இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்ஹ தெரிவித்துள்ளார்.

ஊரகஸ்மங்சந்தி-ஹிபன்கந்த பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

அரிசி விலை தொடர்பில் வெளியிடப்பட்டுள்ள வர்த்தமானி அறிவித்தல் தொடர்பில் கருத்து வெளியிடும் பலரும், அரிசி விலையை குறைப்பதற்கான யோசனையை முன்வைக்க தயக்கம் காட்டுவதற்கு என்ன காரணம் எனவும் குறிப்பிட்டார். அவ்வாறு யோசனையொன்றை முன்வைப்பார்கள் என்றால் அதனை தான் ஏற்றுகொள்வதாகவும் இராஜாங்க அமைச்சர் இதன்போது சுட்டிக்காட்டினார்.

எவ்வாறாயினும், அதிகரித்துச் செல்லும் அரிசியின் விலையை குறைப்பதற்கு எமது அரசு எதிர்காலத்தில் முறையான திட்டமொன்றை அறிமுகப்படுத்துமெனவும் அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

பேரிடரால் பாதிக்கப்பட்ட இலங்கை மக்களுக்கு ரியாதிலுள்ள SLISR மாணவர்களினால் மனிதாபிமான உதவி.

 ‘டிட்வா’ இயற்கைப் பேரழிவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுமுகமாக சவூதி அரேபியாவின் ரியாதிலுள்ள...

பண்டிகை காலத்தை முன்னிட்டு விசேட பாதுகாப்பு நடவடிக்கைகள்!

கிறிஸ்துமஸ் பண்டிகை காலத்தை முன்னிட்டு நாடு முழுவதும் பாதுகாப்பு ஏற்பாடுகள் மேம்படுத்தப்பட்டுள்ளதாக...

மாலைதீவில் தமது பணியை ஆரம்பித்த ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ்

ஸ்ரீ லங்கன் ஏர்லைன்ஸ் விமான சேவையானது மாலைத்தீவின் மாலேவில் உள்ள வேலானா...

பாராளுமன்ற அலுவல்கள் குழுவிற்கு நீண்ட விடுமுறை

சபாநாயகரின் அனுமதியுடன்பாராளுமன்ற ஊழியர்களுக்கு டிசம்பர் 22 மற்றும் 23 ஆம் திகதிகளில்...