அல்லாஹ்தான் ஈஸ்டர் தாக்குதலின் சூத்திரதாரி என்று கூறிய ஞானசாரவிற்கு எதிராக முஸ்லிம் எம்பிக்கள் ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை – இராசமாணிக்கம் சாணக்கியன் அதிரடி கேள்வி!

Date:

இஸ்லாமியர்களின் இறைவனான அல்லாஹ்தான் ஈஸ்டர் தாக்குதலின் பிரதான சூத்திரதாரி என்று தெரிவித்த ஞானசார தேரருக்கு எதிராக அரசாங்கத்திலுள்ள முஸ்லிம் அமைச்சர்களும் உறுப்பினர்களும் வாய்திறக்கவில்லை ஏன் என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பு தெரிவிக்கின்றது.

நாடாளுமன்றில் இன்று புதன்கிழமை உரையாற்றிய நாடாளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் இதனைத் தெரிவித்தார்.

ஜனாதிபதி சர்வதேச நாடகமொன்றை அரங்கேற்றியிருப்பதாகவும் குறிப்பிட்டார். புலம்பெயர் மக்களுடன் பேசத்தயார் என்று ஜனாதிபதி குறிப்பிட்டிருப்பதையிட்டு அவர் இவ்வாறு கூறினார்.

எந்த வாக்குறுதிகளை அளித்தாலும் ஜி.பி.எஸ் வரிச்சலுகை இழக்கப்படுவது உறுதி எனவும் அதற்கு முன்னதாக பயங்கரவாத தடைச்சட்டத்தை அரசாங்கம் நீக்க வேண்டும் எனவும் குறிப்பிட்டார்.

பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளரான ஞானசார தேரர் மீது விசாரணை அவசியம் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

களுத்துறையில் சில பகுதிகளுக்கு 12 மணிநேர நீர்வெட்டு

களுத்துறை மாவட்டத்தின் சில பகுதிகளுக்கு நாளை (05) 12 மணிநேர நீர்வெட்டு...

மட்டக்களப்பில் நடைபெற்ற முஸ்லிம் காங்கிரஸ் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களுக்கான வதிவிட செயலமர்வு!

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களுக்கான வதிவிட செயலமர்வு மட்டக்களப்பு,...

சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்கள் அறிக்கைகளை சமர்ப்பிக்காத அதிகாரிகளுக்கு எதிராக வழக்குத் தாக்கல்!

2025 ஆம் ஆண்டுக்கான சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்கள் தொடர்பான அறிக்கையினை சமர்ப்பிக்காத...

வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுக்குத் தேவையான சாரதி அனுமதிப்பத்திரங்களை வழங்குவதற்கான அலுவலகம் திறப்பு

நாட்டிற்கு வருகை தருகின்ற வெளிநாட்டவர்களுக்குத் தேவையான சாரதி அனுமதிப்பத்திரங்களை வழங்குவதற்கான அலுவலகம்...