ஆட்டமிழந்த  விரக்தியில் கதவை ஓங்கி குத்திய விராட் கோலி | காணொளி

Date:

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி, இங்கிலாந்து அணிக்கு எதிரான ஓவல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸில் 96 பந்துகளுக்கு 44 ஓட்டங்கள் குவித்து அவுட்டானார். இந்நிலையில் அவர் பெவிலியன் திரும்பியதும் அவுட்டான விரக்தியில் உடை அணியும் அறையின் கதவை ஓங்கி குத்தியுள்ளார் கோலி.
மிகவும் நேர்த்தியாக இன்னிங்ஸை அணுகிய கோலி மூன்று இலக்க ஓட்டங்களை  குவிப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆடுகளமும் பேட்டிங்கிற்கு சாதகமாக இருந்த காரணத்தினால் அது கைக்கூடும் என எதிர்பார்க்கப்பட்டது. கோலியும் அந்த நம்பிக்கையுடன் விளையாடினார்.
ஆனால் துரதிர்ஷ்டவசமாக கோலியின் பேட்டில் பட்ட பந்து ஸ்லிப் ஃபீல்டரின் கைகளில் தஞ்சமடைந்தது. அந்த ஓவரை மொயின் அலி வீசியிருந்தார். கோலி பந்து ஸ்பின்னாகும் என எதிர்பார்த்து பேட்டை வைக்க, பந்து பெரிய அளவில் சுழலாத காரணத்தினால் ஆட்டமிழந்துள்ளார்.

Popular

More like this
Related

காஸாவில் போர் நிறுத்தம்: குனூத் அந் நாஸிலாவை நிறுத்திக் கொள்ளுமாறு ஜம்மியத்துல் உலமா வேண்டுகோள்

காஸாவில் போர் நிறுத்தம் தொடர்பாக இதுவரை ஒதப்பட்டு வந்த இன்று முதல்...

இரண்டு ஆண்டுகள் முடக்கத்தில் இருந்த பள்ளிவாசல்: சுத்தம் செய்யத் தொடங்கிய காசா மக்கள்

 யுத்த நிறுத்தத்தை தொடர்ந்து நிலைமைகள் சீராகத் தொடங்கியுள்ள நிலையில் மஸ்ஜித் ஸுஹதா...

முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவை சந்தித்தார் ஞானசார தேரர்

பொதுபல சேனாவின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் உள்ளிட்ட...

நாட்டில் எலிக்காய்ச்சல் பரவுவதற்கு அதிக வாய்ப்புள்ள 12 மாவட்டங்கள் அடையாளம்

நாட்டில் எலிக்காய்ச்சல் பரவுவதற்கு அதிக வாய்ப்புள்ள 12 மாவட்டங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக,...