இராஜாங்க அமைச்சரின் செயல் குறித்து தேர்தல் ஆணைக்குழுவின் நிலைப்பாடு!

Date:

சிறை நிர்வாகம் மற்றும் கைதி மறுவாழ்வு இராஜாங்க அமைச்சர் வெலிக்கடை மற்றும் அனுராதபுரம் சிறைச்சாலைகளுக்கு சென்று மேற்கொண்ட நடவடிக்கைகள் குறித்து தேர்தல் ஆணையம் தனது நிலைப்பாட்டை தெளிவுபடுத்தியுள்ளது.

இன்று (17) நடைபெற்ற தேர்தல் ஆணைக்குழு கூட்டத்தில் இது தொடர்பாக தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, இந்த நடவடிக்கை சட்டத்தின் ஆட்சிக்கு சவாலாக இருப்பதோடு, பொதுப் பிரதிநிதிகள் மீதான மக்களின் நம்பிக்கையை குறைமதிப்பிற்கு உட்படுத்தும் என்றும் ஆணைக்குழு கூறியுள்ளது.இது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்குமாறு சபாநாயகரிடம் கோரிக்கை வைக்க தேர்தல் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.

இதேவேளை, வெலிக்கடை மற்றும் அனுராதபுரம் சிறைச்சாலைகளில் இடம்பெற்ற சம்பவங்களுக்கு பொறுப்பேற்று இராஜாங்க அமைச்சர் லோஹான் ரத்வத்தே கடந்த 15 ஆம் திகதி தனது பதவியை இராஜினாமா செய்தமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

எல்லை நிர்ணயத்துக்கு புதிய குழுவை நியமிக்க அமைச்சரவை அங்கீகாரம்

எல்லை மீள் நிர்ணயத்துக்கென புதிய குழுவொன்றை நியமிப்பதற்கு ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க...

பாகிஸ்தான் உயர்ஸ்தானிகராலயத்தினால் “யவ்ம்-இ-இஸ்தெஹ்சால்” தினம் கொழும்பில் அனுஷ்டிப்பு!

இந்திய சட்டவிரோத ஆக்கிரமிப்பு ஜம்மு மற்றும் காஷ்மீரில் ஆகஸ்ட் 5, 2019ல்...

5வது சவூதி ஊடக மன்றம் ரியாத் நகரில்: மன்னரின் அனுசரனையின் கீழ் உலக ஊடக மற்றும் தொழில்நுட்பத் துறையினர் ஒன்று கூடல்

எழுத்து- காலித் ரிஸ்வான் சவூதி அரேபியாவின் பரபரப்பான புதுமைகளின் தலைநகரான ரியாத் நகர்...

ஶ்ரீலங்கா ஜம்இய்யதுல் குர்ரா மற்றும் அல் மகாரிஉல் குர்ஆனிய்யா சங்கத்துக்கும் இடையே புரிந்துணர்வுஒப்பந்தம்!

கடந்த ஜூன் 20ஆம் திகதி மஸ்ஜிதுன் நபவியில் இடம்பெற்ற சந்திப்பின் போது...