இலங்கை மற்றும் தென் ஆப்ரிக்கா இரண்டாவது ஒருநாள் சர்வதேச போட்டி இன்று!

Date:

இலங்கை மற்றும் தென் ஆபிரிக்க அணிகளுக்கு இடையிலான இரண்டாவது ஒரு நாள் சர்வதேச கிரிக்கெட் போட்டி இன்று (04) நடைபெறவுள்ளது.

கொழும்பு ஆர். பிரேமதாஸ (கெத்தாராம) மைதானத்தில் இன்று பிற்பகல் 2.30 மணியளவில் ஆரம்பமாகவுள்ள இந்தப்போட்டி, இரவு -பகல் ஆட்டமாக நடைபெறவுள்ளது.முதல் போட்டியில் விளையாடிய இலங்கை அணி வீரர்களே இன்றைய போட்டியிலும் விளையாடவுள்ளதாக ஸ்ரீலங்கா கிரிக்கெட் தகவல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இதேவேளை, முதல் போட்டியில் உபாதைக்குள் தென் ஆபிரிக்க அணித் தலைவர் டெம்பா பவுமா, இலங்கையுடனான ஒருநாள் சர்வதேச தொடரிலிருந்து விலகியுள்ளார்.இந்நிலையில், இன்றைய போட்டியில் தென் ஆபிரிக்க அணிக்கு கேஷவ் மஹாராஜ் தலைவராக செயற்படவுள்ளார்.

மூன்று போட்டிகளைக் கொண்ட ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டித் தொடரில் இலங்கை அணி 1-0 என்ற அடிப்படையில் முன்னிலையில் உள்ளது.

Popular

More like this
Related

தேசப் பற்றுக்கு நபிகளார் ஒரு குறியீடு: சுதந்திர தின விசேட கட்டுரை!

முஹம்மத் பகீஹுத்தீன் பிறந்த மண்ணையும் தேசத்தையும் நேசிப்பது மனிதனிடம் உள்ள ஒரு இயற்கையான...

இனவாதம் மற்றும் மதவாதம் அற்ற சமத்துவ சமூகமே எமது இலக்கு: பிரதமர் உறுதி.

78 ஆவது தேசிய சுதந்திர தினத்தை ஒரு புதிய சுதந்திரம் குறித்த...

பேரண்டப் பொருளாதார நன்மைகள் அனைத்து இன மக்களையும் சென்றடைய வேண்டும் – ஜனாதிபதி அநுர

கடந்த நூற்றாண்டில் தவறவிட்ட வெற்றிகளை நாட்டுக்குப் பெற்றுக்கொடுத்து, அனைவரினதும் கனவான, ‘வளமான...

புதிய கணக்காய்வாளர் நாயகமாக சமுதிகா ஜயரத்ன

சிரேஷ்ட பிரதி கணக்காய்வாளர் நாயகமாகப் பணியாற்றும் எல்.எஸ்.ஐ. ஜயரத்னவை புதிய கணக்காய்வாளர்...