உருமாறிய புதிய வகை கொரொனா வைரஸ் | உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை

Date:

கொரோனா வைரஸின் உருமாற்றம் பெற்ற ‘மியு’ கொரோனா குறித்து உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை செய்துள்ளது.சீனாவில் பரவ தொடங்கிய கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் பெரும் அச்சுறுத்தலாக அமைந்துள்ளது. இதற்கு ஒரே தீர்வாக தடுப்பூசி கருதப்படுகிறது.
இதற்கிடையில் உலகின் பல்வேறு இடங்களில் உருமாறிய டெல்டா வகை கொரோனா கண்டறியப்பட்டது. இந்நிலையில் கொரோனா வைரஸ் தற்போது மியு (MU) B.1.621 என்று உருமாற்றம் பெற்றுள்ளதாக உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கைவிடுத்துள்ளது.
இந்த உருமாற்றம் பெற்ற மியு வகை கொரோனா வைரஸ் கொலம்பியாவில் முதன்முதலில் கண்டறியப்பட்டதாகவும் தற்போது அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளிலும் இந்த உருமாற்றம் பெற்ற கொரோனா கண்டறியப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டது. ஆனால் இந்த தொற்றால் பாதிக்கப்பட்டாலும் பெரிய அளவில் பாதிப்பு இருக்காது என்றும் உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
மேலும் அதிக ஆபத்தான இந்த மியு வகை கொரோனா வைரஸ் குறித்து கண்காணித்து வருவதாகவும் உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

Popular

More like this
Related

நள்ளிரவு முதல் எரிபொருள் விலைகள் அதிகரிப்பு

இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் இன்று (21) நள்ளிரவு 12.00 மணி முதல்...

உலக நாடுகளின் எரிபொருள் விலையேற்றம்

அண்மையில் வெளியான உலக எரிபொருள் விலையேற்றத்திற்கமைய பல நாடுகளில் 20 வீதத்திற்கும்...

இலங்கைக்கான சவூதி அரேபியத் தூதுவரின் பெருநாள் வாழ்த்துச் செய்தி

புனித ஈதுல் பித்ர் நோன்புப் பெருநாளை முன்னிட்டு, இலங்கைக்கான சவூதி அரேபியத்...

ஜனாதிபதியின் ஈகைத் திருநாள் வாழ்த்துச் செய்தி!

உலகெங்கிலும் உள்ள முஸ்லிங்கள் ஒரு மாதம் முழுவதும் நோன்பு நோற்று, அதன்...