சந்தையில் அரிசி தட்டுப்பாடு தீவிரமடையும் – வியாபாரிகள் மற்றும் ஆலை உரிமையாளர்கள் எச்சரிக்கை!

Date:

அரிசி மீது விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாட்டு விலையை மாற்றாவிட்டால் சந்தையில் அரிசி தட்டுப்பாடு தீவிரமடையும் என அரிசி வியாபாரிகள் மற்றும் ஆலை உரிமையாளர்கள் தெரிவிக்கின்றனர்.

இதேவேளை, கட்டுப்பாட்டு விலைக்கு அப்பால் அரிசியை விற்பனை செய்யும் அரிசி விற்பனையாளர்களுக்கு விதிக்கப்பட்ட அபராதம் 100,000 ரூபாவாக உயர்த்தப்பட்டதால், அரிசியை விற்பதில் இருந்து சில வியாபாரிகள் விலகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.அத்தோடு அரிசி சந்தையில் அதிக விலைக்கு விற்கப்படுவதால் நுகர்வோர் விவகார அதிகார சபை அரிசிக்கு அதிகபட்ச சில்லறை விலையை நிர்ணயித்து கடந்த 2 ஆம் திகதி விசேட வர்த்தமானி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது.

ஒரு கிலோ நாட்டரிசியின் அதிகபட்ச சில்லறை விலை 98 ரூபாயாகவும், ஒரு கிலோ சம்பா அரிசி 103 ரூபாவாகவும் மற்றும் ஒரு கிலோ கீரி சம்பா 125 ரூபாவாகவும் விலை நிர்ணயிக்கப்பட்டது.அதைத் தொடர்ந்து, அவசர கால அதிகாரங்களின் கீழ் முன்னணி அரிசி ஆலைகளில் நுகர்வோர் விவகார அதிகார சபையினால் (CAA) கடந்த 22 ஆம் திகதி சுற்றிவளைப்புகள் மேற்கொள்ளப்பட்டு நுகர்வோர் விவகார சட்டத்தில் புதிய திருத்தங்கள் கொண்டு வரப்பட்டது.எனினும் புதிய சட்டத்தின்படி, நுகர்வோர் விவகார சட்டத்தின் கீழ் குற்றங்களுக்கான குறைந்தபட்ச அபராதம் 1,000 ரூபாயிலிருந்து 100,000 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் பிற்பகலில் மழைக்கான சாத்தியம்

நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் பி.ப. 1.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது...

நாட்டின் பல மாகாணங்களுக்கு கடும் வெப்பம் குறித்த எச்சரிக்கை

நாளை (21) நாட்டின் பல மாகாணங்களில் மனித உடலால் உணரப்படும் வெப்பத்தின்...

புத்தாண்டு காலத்தில் அதிவேக நெடுஞ்சாலைகள் மூலம் 441 மில்லியன் ரூபாவிற்கும் அதிக வருமானம்

சித்திரை புத்தாண்டு காலப்பகுதியை முன்னிட்டு ஏப்ரல் 10 முதல் 18 ஆம்...

புதிய தூதுவர்கள் மற்றும் உயர்ஸ்தானிகர்கள் ஜனாதிபதியிடம் நற்சான்றிதழ் பத்திரங்கள் கையளிப்பு

இலங்கைக்காக நியமிக்கப்பட்டுள்ள நான்கு புதிய தூதுவர்கள் மற்றும் இரண்டு உயர்ஸ்தானிகர்கள் இன்று...