சாரதி அனுமதிப்பத்திரம் செல்லுபடியாகும் காலம் நீடிப்பு

Date:

சாரதி அனுமதிப்பத்திரம் செல்லுபடியாகும் காலம் நீடிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் 30ம் திகதி வரையில் சாரதி அனுமதிப்பத்திரம் செல்லுபடியாகும் காலம் நீடிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஏப்ரல் மாதம் முதலாம் திகதி தொடக்கம் இந்த மாதம் 30ம் திகதி வரையிலான காலப் பகுதியில் கலாவதியாகும் சாரதி அனுமதிப்பத்திரங்களின் செல்லுபடியாகும் காலம் ஒராண்டு காலத்திற்கு நீடிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பிலான வர்த்தமானி அறிவித்தல் ஒன்றும் வெளியிடப்பட்டுள்ளது.

எதிர்வரும் ஒக்ரோபர் மாதம் 1ம் திகதி தொடக்கம் 2022ம் ஆண்டு மார்ச் மாதம் 31ம் திகதி வரையிலான காலப் பகுதியில் கலாவதியாகும் சாரதி அனுமதிப்பத்திரங்களின் செல்லுபடியாகும் காலம் மேலும் ஆறு மாதங்களுக்கு நீடிக்கப்படுவதாக வர்த்தமானி அறிவித்தல் மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது.

கோவிட் பெருந்தொற்று நிலைமைகளினால் சாரதி அனுமதிப்பத்திரங்களை புதுப்பித்துக் கொள்வதில் நிலவி வரும் சிக்கல்களை கருத்திற் கொண்டு இவ்வாறு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Popular

More like this
Related

மட்டக்களப்பில் நடைபெற்ற முஸ்லிம் காங்கிரஸ் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களுக்கான வதிவிட செயலமர்வு!

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களுக்கான வதிவிட செயலமர்வு மட்டக்களப்பு,...

சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்கள் அறிக்கைகளை சமர்ப்பிக்காத அதிகாரிகளுக்கு எதிராக வழக்குத் தாக்கல்!

2025 ஆம் ஆண்டுக்கான சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்கள் தொடர்பான அறிக்கையினை சமர்ப்பிக்காத...

வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுக்குத் தேவையான சாரதி அனுமதிப்பத்திரங்களை வழங்குவதற்கான அலுவலகம் திறப்பு

நாட்டிற்கு வருகை தருகின்ற வெளிநாட்டவர்களுக்குத் தேவையான சாரதி அனுமதிப்பத்திரங்களை வழங்குவதற்கான அலுவலகம்...

கம்பஹா – கொழும்பு தனியார் பஸ் சேவைகள் இடைநிறுத்தம்

ஒரு சில தனியார் பஸ் சேவைகள் தமது சேவைகளிலிருந்து விலகியுள்ளன. கம்பஹா –...