சோமாலியாவில் 30 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் சினிமா திரையிடப்பட்டுள்ளதால், ரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது.
வாட்டும் உணவுப் பஞ்சம் ஒரு புறமும் பல ஆண்டுகாலமாக நிலவி வரும் உள்நாட்டுப் போர் மறுபுறமுமாக வாழத் தகுதியற்ற பூமியாக சோமாலியா காணப்படுகிறது.கிழக்கு ஆப்பிரிக்க நாடான சோமாலியா. 1991-ஆம் ஆண்டிலிருந்தே வன்முறை மோதல்களால் அந் நாடு பாதிக்கப்பட்டு வருகிறது. அங்கு யுத்த சூழல் உருவானதால் 1991-ல் திரையரங்குகள் மூடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.