ஜப்பானின் புதிய பிரதமராக ஆளும் சுதந்திர ஜனநாயகக் கட்சியின் முன்னாள் அமைச்சர் புமியோ கிஷிதா தேர்வு!

Date:

ஜப்பான் நாட்டின் புதிய பிரதமராக ஆளும் சுதந்திர ஜனநாயகக் கட்சியின் முன்னாள் அமைச்சர் புமியோ கிஷிதா தேர்வு செய்யப்பட்டிருக்கிறார்.

கடந்த 2020 ஆம் ஆண்டு பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்ட யோஷிகிதா சுகா மேல் கரோனா தொற்று காலத்தில் அவருடைய செயல்பாடுகள் குறித்து கடுமையான விமர்சனங்கள் எழுந்ததைத் தொடர்ந்து இந்த முறை தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என அறிவித்திருந்தார்.இதனால் புதிய பிரதமரைத் தேர்ந்தெடுக்கும் தேவை வந்ததால் தேர்தலை நடத்தினர். இதில் ஆளும் கட்சியைச் சேர்ந்தவரே பிரதமராக முடியும் என்பதால் சுதந்திர ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த முன்னாள் வெளியுறவுத் துறை அமைச்சர் புமியோ கிஷிதா போட்டியிட்டார்.அவரை எதிர்த்து மேலும் இருவர் போட்டியிட்டாலும் இத்தேர்தலில் 256 வாக்குகளைப் பெற்று புமியோ வென்றதால் ஜப்பானின் புதிய பிரதமராக தேர்வு செய்யப்பட்டிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

Popular

More like this
Related

நாடளாவிய ரீதியில் குற்றச் செயல்கள் மற்றும் துப்பாக்கிச்சூட்டுச் சம்பவங்களை தடுக்க 15 பொலிஸ் சிறப்புப் படைகள்!

நாடளாவிய ரீதியில் தொடர்ச்சியாக இடம்பெற்று வரும் குற்றச் செயல்கள் மற்றும் துப்பாக்கிச்...

– வடக்கு, கிழக்கு, ஊவா, வடமத்தியில் பிற்பகலில் மழை

இன்றையதினம் (05) நாட்டின் மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும்...

களுத்துறையில் சில பகுதிகளுக்கு 12 மணிநேர நீர்வெட்டு

களுத்துறை மாவட்டத்தின் சில பகுதிகளுக்கு நாளை (05) 12 மணிநேர நீர்வெட்டு...