தாய்லாந்திடமிருந்து இலங்கைக்கு மருத்துவ உபகரணங்கள் அன்பளிப்பு!

Date:

வெளிநாட்டு அமைச்சில் நடைபெற்ற நிகழ்வில் கொழும்பிலுள்ள ரோயல் தாய் தூதரகத்தின் பொறுப்பாளரான தயாடத் கஞ்சனாபிபட்குலிடம் இருந்து வெளிவிவகார செயலாளர் ஜயநாத் கொலம்பகே மருத்துவ உபகரணங்களை நன்கொடையாகப் பெற்றுக் கொண்டார்.

நாடு முழுவதும் உள்ள கொவிட்-19 நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவமனைகளுக்கு விநியோகிக்கும் பொருட்டு, குறித்த நன்கொடை உற்பத்தி, வழங்கல் மற்றும் ஒழுங்குமுறை இராஜாங்க அமைச்சின் செயலாளர் கலாநிதி. ஆர்.எம்.எஸ்.கே. ரத்நாயக்கவிடம் கையளிக்கப்பட்டது.

30 ஒட்சிசன் செறிவூட்டிகள், 02 வென்டிலேட்டர்கள், 108 ஒட்சிசன் தாங்கிகள், 62 ரெகுலேட்டர்கள் / கேனுலே செட்டுகள், 160 பல்ஸ் ஒக்சிமீட்டர்கள் மற்றும் 150 தனிப்பட்ட பாதுகாப்பு உபகரணங்கள் ஆகியவை இந்த நன்கொடையில் உள்ளடங்கும். இந்த நன்கொடையானது, தாய்லாந்தின் வெளிநாட்டு உறவுகள் அமைச்சு, யுனெஸ்கெப் தாய்லாந்து, சொம்டெட் ஃப்ரா நயனசம்வர இந்த நன்கொடையில் ஃப்ரா சங்கராஜ் வட், போவோரனிவ்ஸ் விகாரை அறக்கட்டளை, தாய்லாந்தின் இலங்கை சங்கம், தாய் – இலங்கை வர்த்தக சபை மற்றும் கொழும்பில் உள்ள ரோயல் தாய் தூதரகம் ஆகியவற்றின் பங்களிப்புக்களை உள்ளடக்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

நன்கொடைகளை அனுப்புவதற்கான ஏற்பாடுகளை பேங்கொக்கில் உள்ள இலங்கைத் தூதரகம் ஒருங்கிணைந்து மேற்கொண்டதுடன், குறித்த நன்கொடை கட்டார் எயார்வேஸின் உதவியுடன் விமானத்தில் அனுப்பி வைக்கப்பட்டது.

Popular

More like this
Related

வடக்கு, கிழக்கு, ஊவா, வடமத்திய பகுதிகளில் பல தடவை மழை!

இன்றையதினம் (05) நாட்டின் வடக்கு, கிழக்கு, ஊவா, வடமத்திய, மத்திய மாகாணங்களிலும்...

தேசப் பற்றுக்கு நபிகளார் ஒரு குறியீடு: சுதந்திர தின விசேட கட்டுரை!

முஹம்மத் பகீஹுத்தீன் பிறந்த மண்ணையும் தேசத்தையும் நேசிப்பது மனிதனிடம் உள்ள ஒரு இயற்கையான...

இனவாதம் மற்றும் மதவாதம் அற்ற சமத்துவ சமூகமே எமது இலக்கு: பிரதமர் உறுதி.

78 ஆவது தேசிய சுதந்திர தினத்தை ஒரு புதிய சுதந்திரம் குறித்த...

பேரண்டப் பொருளாதார நன்மைகள் அனைத்து இன மக்களையும் சென்றடைய வேண்டும் – ஜனாதிபதி அநுர

கடந்த நூற்றாண்டில் தவறவிட்ட வெற்றிகளை நாட்டுக்குப் பெற்றுக்கொடுத்து, அனைவரினதும் கனவான, ‘வளமான...