தெங்கு தினத்தை முன்னிட்டு 10 நினைவு முத்திரைகள் வெளியீடு!

Date:

சர்வதேச தெங்கு தினத்தை முன்னிட்டு முதல் நாள் உறை மற்றும் 10 விசேட நினைவு முத்திரைகள் வெளியிடும் நிகழ்வு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் தலைமையில் இன்று (02) அலரி மாளிகையில் இடம்பெற்றது.

1969 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட ஆசிய பசுபிக் தெங்கு குழுமத்தினால் 1998ஆம் ஆண்டு நடத்தப்பட்ட 25ஆவது கூட்டத்தின் போது முதல் முறையாக செப்டம்பர் மாதம் 2ஆம் திகதி உலக தெங்கு தினமாக பிரகடனப்படுத்தப்பட்டது.

தென்னை பயிர்ச்செய்கைக்கான ஆராய்ச்சிக்காக 1929ஆம் ஆண்டு நிறுவப்பட்ட உலகின் ஒரே நிறுவனம் இலங்கை தெங்கு ஆராய்ச்சி நிறுவனமாகும்.

இம்முறை தெங்கு தினத்தை முன்னிட்டு இலங்கை தெங்கு ஆராய்ச்சி நிறுவனத்தினால் முன்மொழியப்பட்டிருந்த பல வேலைத்திட்டங்களை கொவிட் தொற்று நிலைமை காரணமாக எதிர்காலத்தில் செயற்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

இலங்கை தெங்கு ஆராய்ச்சி நிறுவனம், தபால் திணைக்களத்துடன் இணைந்து இவ்வாறு 10 விசேட நினைவு முத்திரைகளை வெளியிடுவது இலங்கை வரலாற்றில் முதல் முறையாகும். தென்னையுடன் தொடர்புடைய பல்வேறு உற்பத்திகள் பத்தினை சித்தரிக்கும் வகையில் இந்நினைவு முத்திரைகள் வெளியிடப்பட்டுள்ளன.

பதில் பிரதி தபால்மா அதிபர் (செயற்பாடு) துசித ஹூலங்கமுவ முதல் நாள் உறை மற்றும் நினைவு முத்திரைகளை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிடம் வழங்கினார்.

Popular

More like this
Related

பேரிடரால் பாதிக்கப்பட்ட இலங்கை மக்களுக்கு ரியாதிலுள்ள SLISR மாணவர்களினால் மனிதாபிமான உதவி.

 ‘டிட்வா’ இயற்கைப் பேரழிவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுமுகமாக சவூதி அரேபியாவின் ரியாதிலுள்ள...

பண்டிகை காலத்தை முன்னிட்டு விசேட பாதுகாப்பு நடவடிக்கைகள்!

கிறிஸ்துமஸ் பண்டிகை காலத்தை முன்னிட்டு நாடு முழுவதும் பாதுகாப்பு ஏற்பாடுகள் மேம்படுத்தப்பட்டுள்ளதாக...

மாலைதீவில் தமது பணியை ஆரம்பித்த ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ்

ஸ்ரீ லங்கன் ஏர்லைன்ஸ் விமான சேவையானது மாலைத்தீவின் மாலேவில் உள்ள வேலானா...

பாராளுமன்ற அலுவல்கள் குழுவிற்கு நீண்ட விடுமுறை

சபாநாயகரின் அனுமதியுடன்பாராளுமன்ற ஊழியர்களுக்கு டிசம்பர் 22 மற்றும் 23 ஆம் திகதிகளில்...