நாளை முதல் மேலும் சில விமான சேவைகள் ஆரம்பம்!

Date:

நாளை முதல் 07 விமான சேவை நிறுவனங்கள் இலங்கைக்கான நேரடி விமான சேவைகளை (DIRECT FLIGHTS) ஆரம்பிக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய, இந்த 07 விமான நிறுவனங்களில் 05 நிறுவனங்களின் விமானங்கள் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்துக்கான நேரடி விமான சேவைகளை ஆரம்பிக்கவுள்ளன.அவற்றில் ரஷ்யாவின் இரண்டு விமான நிறுவனங்களாகிய AEROFOLT மற்றும் AZUR AIR ஆகியன நாளை (01) முதல் நேரடி விமான சேவைகளை முன்னெடுக்கவுள்ளன.

இத்தாலியின் NEOS விமான நிறுவனம், பிரான்ஸின் AIRFRANCE நிறுவனம், பங்களாதேஸின் US BANGLA AIRLINES நிறுவனம் ஆகியனவும் நாளை முதல் இலங்கைக்கான நேரடி விமான சேவைகளை இயக்கவுள்ளன.அத்தோடு, இஸ்ரேலின் ARKIA விமான நிறுவனமும், சுவிட்ஸர்லாந்தின் SWISSAIR நிறுவனமும் இலங்கைக்கான நேரடி விமான சேவைளை முன்னெடுப்பதற்கு விருப்பம் வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

சுரேஷ் சலேயின் உடல் ஆரோக்கியம் மோசமடைந்து வருவதால் ஜனாதிபதிக்கு கடிதம்

அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள் பணிப்பாளர் சுரேஷ் சலேயின் ஆரோக்கிய நிலைமை...

இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமியின் ஏற்பாட்டில் நாளை புத்தளத்தில் இஸ்லாமிய மாநாடு!

இலங்கையில் பல தசாப்த காலங்களாகத் தொடர்ந்து இஸ்லாமியப் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு...

நாட்டை சுற்றியுள்ள கடற்பரப்புகளுக்கு சிவப்பு எச்சரிக்கை !

காங்கேசன்துறையிலிருந்து மன்னார் ஊடாக கற்பிட்டி வரையான கடற்பரப்புகளுக்கு வளிமண்டலவியல் திணைக்களம் பலத்த...

தொழுநோய் ஒழிப்பிற்கான உலக சுகாதார அமைப்பின் தூதுவருடன் அமைச்சர் நலிந்த சந்திப்பு

தொழுநோய் ஒழிப்பிற்கான உலக சுகாதார அமைப்பின் (WHO) நல்லெண்ண தூதுவர் யோஹெய்...