பதுளை மாவட்டம் முழுவதும் நடமாடும் சேவையின் ஊடாக தடுப்பூசிகள் பெற்றுக்கொடுக்கும் விசேட வேலைத்திட்டம்

Date:

பதுளை மாவட்டம் எங்கும் இதுவரையில் தடுப்பூசிகளை பெற்றுக் கொள்ளாத 60 வயதுக்கு மேற்பட்டோருக்கு இராணுவ வீரர்களின் உதவியுடன் நடமாடும் சேவையின் ஊடாக   வீடுகளுக்கே சென்று  தடுப்பூசிகளை பெற்றுக் கொடுப்பதற்கான விசேட வேலைத்திட்டம் நேற்று 31  ஆம் திகதி  முதல் நடைமுறையில் செயற்படுகின்றது.

இவ் வேலைத்திட்டம் பதுளை மாவட்டத்தின் ஊவா பரணகம பிரதேச செயலாளர் பிரிவில் 31,1ஆம் திகதியிலும் வெளிமடை பிரதேச செயலாளர் பிரிவில் 2 ஆம் திகதி  வியாழக்கிழமையும் பண்டாரவளை பிரதேச செயலாளர் பிரிவில் மூன்றாம் திகதி வெள்ளிக்கிழமை அன்றும் ,அப்புத்தளை பிரதேச செயலாளர் பிரிவில் எதிர்வரும் நான்காம் திகதி சனிக்கிழமை அன்றும் , எல்ல பிரதேச செயலாளர் பிரிவில் ஐந்தாம் திகதி ஞாயிற்றுக்கிழமை அன்று தடுப்பூசிகளை பெற்றுக் கொள்ளாத 60 வயதுக்கு மேற்பட்டோருக்கு இராணுவ வீரர்களின் உதவியுடன் நடமாடும் சேவையின் ஊடாக   வீடுகளுக்கே சென்று  தடுப்பூசிகளை பெற்றுக் கொடுப்பதற்கான விசேட வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்த படுவதுடன்

அடுத்த வாரம் 6 ஆம் திகதி திங்கட்கிழமை ஹாலிஎல பிரதேச செயலாளர் பிரிவிலும்  9 ஆம் திகதி வியாழக்கிழமை அன்று மிகாஹிவுல  பிரதேச செயலாளர் பிரிவிலும் ,எதிர்வரும் 10ஆம் திகதி வெள்ளிக்கிழமை அன்று ரிதிமாலியத்த  பிரதேச செயலாளர் பிரிவிலும், மஹியங்கனை பிரதேச செயலாளர் பிரிவில் எதிர்வரும் 11 ஆம் திகதியும் தடுப்பூசிகள் வழங்கப்பட உள்ளது அத்துடன் எதிர்வரும் 12ஆம் திகதி சோர்ணதொட்ட பிரதேச செயலாளர் பிரிவிலும் தடுப்பூசிகளை பெற்றுக் கொள்ளாத 60 வயதுக்கு மேற்பட்டோருக்கு இராணுவ வீரர்களின் உதவியுடன் நடமாடும் சேவையின் ஊடாக   வீடுகளுக்கே சென்று  தடுப்பூசிகளை பெற்றுக் கொடுப்பதற்கான விசேட வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படுகின்றது

இவ்வேலைத்திட்டத்தில் 60 வயதுக்கு மேற்பட்டோர் தடுப்பூசிகளை பெற்றுக் கொள்ளாதவர்கள் அனைவரும்  கண்டிப்பாக தடுப்பூசிகளை பெற்றுக்கொள்ள வேண்டும் என பதுளை மாவட்ட செயலாளர் தமயந்தி பரணகம வேண்டுகோள் விடுத்துள்ளார்

பதுளை பிராந்திய செய்தியாளர்

இரா.சுரேஸ்குமார்

Popular

More like this
Related

மத மற்றும் கலாசார விவகாரங்களுக்கான புதிய பிரதி அமைச்சராக முனீர் முலஃபர் கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டார்

மத மற்றும் கலாச்சார விவகாரங்களுக்கான புதிய பிரதி அமைச்சராக  முனீர் முலாஃபர்...

பாலின சமத்துவத்தை முழுமையாக அடைய தொடர்ச்சியான அர்ப்பணிப்பு தேவை: பிரதமர்

பெண்கள் மற்றும் பெண் பிள்ளைகளின் உரிமைகள் மற்றும் நல்வாழ்வை முன்னேற்றுவதற்கும், சமத்துவம்...

கல்வி சீர்திருத்தங்களின் கீழ் பாடசாலை நேரம் நீடிப்பு: கல்வியமைச்சு

நடைமுறைப்படுத்தப்படவுள்ள கல்வி சீர்திருத்தங்களின் கீழ் பாடசாலை நேரம் பிற்பகல் 2 மணி...

கல்கிஸ்ஸை சட்டத்தரணி தாக்குதல் சம்பவம்; பொலிஸ் அதிகாரிக்கு பிணை

கல்கிஸ்ஸை நீதிமன்ற வளாகத்திற்குள் பொலிஸ் அதிகாரியொருவர் சட்டத்தரணியொருவரைத் தாக்கிய சம்பவம் தொடர்பாக...