பதுளை மாவட்டம் முழுவதும் நடமாடும் சேவையின் ஊடாக தடுப்பூசிகள் பெற்றுக்கொடுக்கும் விசேட வேலைத்திட்டம்

Date:

பதுளை மாவட்டம் எங்கும் இதுவரையில் தடுப்பூசிகளை பெற்றுக் கொள்ளாத 60 வயதுக்கு மேற்பட்டோருக்கு இராணுவ வீரர்களின் உதவியுடன் நடமாடும் சேவையின் ஊடாக   வீடுகளுக்கே சென்று  தடுப்பூசிகளை பெற்றுக் கொடுப்பதற்கான விசேட வேலைத்திட்டம் நேற்று 31  ஆம் திகதி  முதல் நடைமுறையில் செயற்படுகின்றது.

இவ் வேலைத்திட்டம் பதுளை மாவட்டத்தின் ஊவா பரணகம பிரதேச செயலாளர் பிரிவில் 31,1ஆம் திகதியிலும் வெளிமடை பிரதேச செயலாளர் பிரிவில் 2 ஆம் திகதி  வியாழக்கிழமையும் பண்டாரவளை பிரதேச செயலாளர் பிரிவில் மூன்றாம் திகதி வெள்ளிக்கிழமை அன்றும் ,அப்புத்தளை பிரதேச செயலாளர் பிரிவில் எதிர்வரும் நான்காம் திகதி சனிக்கிழமை அன்றும் , எல்ல பிரதேச செயலாளர் பிரிவில் ஐந்தாம் திகதி ஞாயிற்றுக்கிழமை அன்று தடுப்பூசிகளை பெற்றுக் கொள்ளாத 60 வயதுக்கு மேற்பட்டோருக்கு இராணுவ வீரர்களின் உதவியுடன் நடமாடும் சேவையின் ஊடாக   வீடுகளுக்கே சென்று  தடுப்பூசிகளை பெற்றுக் கொடுப்பதற்கான விசேட வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்த படுவதுடன்

அடுத்த வாரம் 6 ஆம் திகதி திங்கட்கிழமை ஹாலிஎல பிரதேச செயலாளர் பிரிவிலும்  9 ஆம் திகதி வியாழக்கிழமை அன்று மிகாஹிவுல  பிரதேச செயலாளர் பிரிவிலும் ,எதிர்வரும் 10ஆம் திகதி வெள்ளிக்கிழமை அன்று ரிதிமாலியத்த  பிரதேச செயலாளர் பிரிவிலும், மஹியங்கனை பிரதேச செயலாளர் பிரிவில் எதிர்வரும் 11 ஆம் திகதியும் தடுப்பூசிகள் வழங்கப்பட உள்ளது அத்துடன் எதிர்வரும் 12ஆம் திகதி சோர்ணதொட்ட பிரதேச செயலாளர் பிரிவிலும் தடுப்பூசிகளை பெற்றுக் கொள்ளாத 60 வயதுக்கு மேற்பட்டோருக்கு இராணுவ வீரர்களின் உதவியுடன் நடமாடும் சேவையின் ஊடாக   வீடுகளுக்கே சென்று  தடுப்பூசிகளை பெற்றுக் கொடுப்பதற்கான விசேட வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படுகின்றது

இவ்வேலைத்திட்டத்தில் 60 வயதுக்கு மேற்பட்டோர் தடுப்பூசிகளை பெற்றுக் கொள்ளாதவர்கள் அனைவரும்  கண்டிப்பாக தடுப்பூசிகளை பெற்றுக்கொள்ள வேண்டும் என பதுளை மாவட்ட செயலாளர் தமயந்தி பரணகம வேண்டுகோள் விடுத்துள்ளார்

பதுளை பிராந்திய செய்தியாளர்

இரா.சுரேஸ்குமார்

Popular

More like this
Related

தன்னைப் போலவே தன் சந்ததியையும் இலட்சியத்துக்காக உருவாக்க விரும்பிய ஊடகவியலாளர் அனஸ் அல்சரீப்!

இஸ்ரேலின் தாக்குதலில் உயிரிழந்த பாலஸ்தீன பத்திரிகையாளர் அனஸ் சரீபின் மனைவி, தங்கள்...

ஊடகக் குரல்களை அடக்குவது பாலஸ்தீன “இனப்படுகொலை” யின் யதார்த்தங்களை மறைக்கும் பரந்த முயற்சியின் ஒரு பகுதியாகும் – இலங்கை சுதந்திர ஊடக இயக்கம் கண்டனம்

காசா மோதலின் போது ஊடகவியலாளர்கள் கொல்லப்படுவதையும் பலஸ்தீனக் குரல்கள் அடக்கப்படுவதையும் இலங்கையின்...

இராணுவ புலனாய்வுப் பிரிவின் பணிப்பாளராக மேஜர் ஜெனரல் மஜீத் நியமனம்

இராணுவ புலனாய்வு படையணியின் புதிய கட்டளைத் தளபதியாக சிரேஷ்ட இராணுவ அதிகாரி...

தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் முதலாவது தேசிய மீலாத் விழா நிகழ்வுகள் இம்முறை ஹம்பாந்தோட்டையில்..!

தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் முதலாவது தேசிய மீலாத் விழா நிகழ்வுகள்...