கொவிட் தொற்று உறுதியான மேலும் 944 பேர் இன்று அடையாளம் காணப்பட்டுள்ளனர்.சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு இதனை தெரிவித்துள்ளது.
முன்னதாகஇன்று 2,884 கொவிட் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டிருந்தனர்.அதன்படி இன்று கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டவர்களின் எண்ணிக்கை 3,828 ஆக உயர்வடைந்துள்ளது.
இதற்கமைய நாட்டில் இதுவரை மொத்தமாக 444,130 பேருக்கு கொவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.அத்துடன்,கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 2,060 பேர் இன்று குணமடைந்துள்ளனர்.அதன்படி, நாட்டில் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 376,216 ஆக அதிகரித்துள்ளது.