அரிசி விலை அதிகரித்தமைக்கான காரணம்-அமைச்சர் விளக்கம்!

Date:

பாரிய நெல் ஆலை உரிமையாளர்கள் போதுமான அளவு நெல்லை சந்தைக்கு வியோகிக்காமையினால் அரிசிக்கு தட்டுப்பாடு ஏற்பட்டு விலை அதிகரிக்கப்பட்டதாக வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்த்தன தெரிவித்தார்.

அரசாங்கம் நிர்ணயித்த விலைக்கு அரிசியை சந்தைக்கு விநியோகிப்பதாக உறுதி தெரிவித்திருந்த போதிலும் உறுதி மொழியை நிறைவேற்ற தவறிவிட்டதாக தெரிவித்த அமைச்சர் அரசாங்கம் மேற்கொள்ளும் பொருளாதார முகாமைத்துவத் தீர்மானங்களை சில தரப்பினர் பிழையாக அர்த்தப்படுத்திக் கொள்வதாகவும் கூறினார்.

பொருளாதாரம் சம்பந்தமான முறையான அனுபவமற்றவர்கள் பொருளாதார முகாமைத்துவம் பற்றி அரசாங்கம் மேற்கொள்ளும் நடவடிக்கைகளை பிழையென அர்த்தப்படுத்திக் கொள்கொள்கின்றனர். 623 பொருட்களுக்கு 100 வீத நிதி வைப்பை மத்திய வங்கி அறிவித்திருப்பது, அத்தியாவசியமற்ற பொருட்களின் இறக்குமதியை குறைப்பதற்காகும் என்றும் வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்த்தன மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

புதிய திட்டங்களுடன் மக்கள் பணியை அர்ப்பணிப்புடன் முன்னெடுப்போம்- ஜனாதிபதி செயலாளர்

புதிய கருத்துக்கள் மற்றும் திட்டங்களுடன் ஜனாதிபதியின் மக்கள் நலன் சார்ந்த வேலைத்திட்டங்களை...

முன்னாள் எம்.பி. சந்தன கத்ரியாராச்சி கைது!

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சந்தன கத்ரியாராச்சி கொழும்பு குற்றப் பிரிவினரால் (CCD)...

துருக்கியில் உள்ள இலங்கைத் தூதரகத்தில் புத்தாண்டு கொண்டாட்டம்

துருக்கிக்கான இலங்கைத் தூதரகத்தின் அதிகாரிகள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் ஒன்றிணைந்து, சிங்கள...

மாற்றியமைக்கப்பட்ட வாகனப் பதிவு எண்களை பயன்படுத்துவோருக்கு கடும் எச்சரிக்கை!

மோட்டார் போக்குவரத்துத் திணைக்களத்தினால் வழங்கப்படும் வழக்கமான வாகனப் பதிவு இலக்கங்களுக்குப் பதிலாக,...