அல்லாஹ்தான் ஈஸ்டர் தாக்குதலின் சூத்திரதாரி என்று கூறிய ஞானசாரவிற்கு எதிராக முஸ்லிம் எம்பிக்கள் ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை – இராசமாணிக்கம் சாணக்கியன் அதிரடி கேள்வி!

Date:

இஸ்லாமியர்களின் இறைவனான அல்லாஹ்தான் ஈஸ்டர் தாக்குதலின் பிரதான சூத்திரதாரி என்று தெரிவித்த ஞானசார தேரருக்கு எதிராக அரசாங்கத்திலுள்ள முஸ்லிம் அமைச்சர்களும் உறுப்பினர்களும் வாய்திறக்கவில்லை ஏன் என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பு தெரிவிக்கின்றது.

நாடாளுமன்றில் இன்று புதன்கிழமை உரையாற்றிய நாடாளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் இதனைத் தெரிவித்தார்.

ஜனாதிபதி சர்வதேச நாடகமொன்றை அரங்கேற்றியிருப்பதாகவும் குறிப்பிட்டார். புலம்பெயர் மக்களுடன் பேசத்தயார் என்று ஜனாதிபதி குறிப்பிட்டிருப்பதையிட்டு அவர் இவ்வாறு கூறினார்.

எந்த வாக்குறுதிகளை அளித்தாலும் ஜி.பி.எஸ் வரிச்சலுகை இழக்கப்படுவது உறுதி எனவும் அதற்கு முன்னதாக பயங்கரவாத தடைச்சட்டத்தை அரசாங்கம் நீக்க வேண்டும் எனவும் குறிப்பிட்டார்.

பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளரான ஞானசார தேரர் மீது விசாரணை அவசியம் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

கொழும்பு பல்கலைக்கழகத்தில் நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு

நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களை கௌரவிக்கும் சிறப்பு...

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகள் வெளியானது

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகளைக் கல்வி அமைச்சு...

டிரம்பின் ‘அமைதித் திட்டம்’ வெற்றியளிக்குமா?

உண்மையில் காசா பகுதியை உள்ளடக்கிய மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் மோதல் அக்டோபர்...

பிரதமர் சீனாவிற்கு விஜயம்

“பெண்கள் மீதான உலகளாவிய தலைவர்கள் கூட்டத்தில்” கலந்து கொள்வதற்காக பிரதமர் கலாநிதி...