இலங்கையில் உணவு பற்றாக்குறை ஏற்படுவதற்கான சாத்தியக் கூறுகள் எதுவும் இல்லை | அஜித் நிவாட் கப்ரால்

Date:

2.8 பில்லியன் அமெரிக்க டொலராக வீழ்ச்சியடைந்திருந்த வெளிநாட்டு கையிருப்பானது தற்போது 3.8 பில்லியன் அமெரிக்க டொலராக அதிகரித்துள்ளதாக நிதி, மூலதன சந்தை மற்றும் அரச தொழில் முயற்சி மறுசீரமைப்பு இராஜாங்க அமைச்சர் அஜித் நிவாட் கப்ரால் அல்-ஜசீரா சர்வதேச தொலைக்காட்சிக்கு வழங்கிய செவ்வியில் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் உணவு பற்றாக்குறை ஏற்படுவதற்கான சாத்தியக் கூறுகள் எதுவும் இல்லை எனவும், இலங்கை அரசாங்கம் இது தொடர்பாக பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக சீனி போன்ற பொருட்களுக்கு பற்றாக்குறை ஏற்பட்டுள்ள போதிலும், அதில் இருந்து மீள்வதற்கு ஏற்றவகையில் அரசாங்கம் உறுதியான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது என தெரிவித்துள்ளார்.

காணொளி

https://www.aljazeera.com/program/inside-story/2021/9/4/does-sri-lanka-need-major-economic-reform-to-tackle-economic-cris

Popular

More like this
Related

உண்மை முழுமையாக வெளிப்படும் வரை நீதிக்கான எமது போராட்டம் ஓயாது: கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை

2019ஆம் ஆண்டு நடத்தப்பட்ட உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகள்,...

‘அமைதி பாதயாத்திரைக்கு ஆதரவளிப்பது கௌரவம்’: ஜனாதிபதி

இன்று (21) ஆரம்பமாகும் ‘அமைதி பாதயாத்திரைக்கு ‘ தனது முழுமையான ஆதரவை...

உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல் இடம்பெற்று 7ஆண்டுகள் நிறைவு

கடந்த 2019ஆம் ஆண்டு ஏப்ரல் 21ஆம் திகதி கத்தோலிக்க தேவாலயங்கள் மற்றும்...

நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் பிற்பகலில் மழைக்கான சாத்தியம்

நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் பி.ப. 1.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது...