கண்டியில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்க நடவடிக்கை!

Date:

கண்டியில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்க தொடங்கப்பட்ட கெட்டம்பே மேம்பாலத்தின் கட்டுமானத்தை துரிதப்படுத்துமாறு ஆளுங் கட்சியின் பிரதம கொறடாவும் நெடுஞ்சாலைகள் மற்றும் வீதி அபிவிருத்தி அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

கண்டியில் போக்குவரத்து நெரிசலைக் குறைப்பதற்காக ஹங்கேரி குடியரசின் நிதியுதவி பெற்ற கெட்டம்பே மேம்பாலத்தின் கட்டுமானத்தை துரிதப்படுத்துமாறு ஆளுங்கட்சியின் பிரதம கொறடாவும் நெடுஞ்சாலைகள் மற்றும் வீதி அபிவிருத்தி அமைச்சருமான ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ திட்ட பணிப்பாளர் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கியுள்ளார்.

கெட்டம்பேயில் மேம்பாலம் அமையப்பெறுவதால் பேராதனை – கண்டி வீதியில் போக்குவரத்து நெரிசல் குறையும் என்றும் அதே நேரத்தில் 18 வீதிகள் அடையாளம் காணப்பட்டு அகலப்படுத்தப்பட்டு கண்டியில் போக்குவரத்து நெரிசலை போக்க திட்டங்கள் வகுக்கப்பட்டு வருகின்றன.

கொழும்பு மற்றும் அதன் புறநகர்ப் பகுதிகளில் உள்ள முக்கிய வீதிகளில் தற்போது நிலவும் போக்குவரத்து நெரிசலைத் குறைக்கும் நடவடிக்கையாக நெரிசலான பகுதிகளில் மேம்பாலம் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ மேலும் தெரிவித்தார்.

Popular

More like this
Related

இந்திய பொருளாதாரம், கல்வி, கலாச்சார அனுபவங்களை பகிர்ந்த இலங்கை இளம் அரசியல் தலைவர்கள்!

இந்திய அரசு, இந்திய வெளிவிவகார அமைச்சு மற்றும் இந்திய கலாச்சார உறவுகளுக்கான...

ஜனாதிபதி தலைமையில் உலக ஆதிவாசிகள் தின தேசிய கொண்டாட்டம்

உலக ஆதிவாசிகள் தினத்தை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த தேசிய வைபவம் ஜனாதிபதி...

காசாவைக் கைப்பற்றும் இஸ்ரேலின் திட்டம் குறித்து இலங்கை ஆழ்ந்த கவலை!

காசா நகரத்தின் கட்டுப்பாட்டைக் கைப்பற்ற இஸ்ரேல் எடுத்த முடிவு குறித்து இலங்கை...

முன்னாள் முதலமைச்சருக்கு ரூ.77 இலட்சத்திற்கும் அதிக மேலதிக எரிபொருள்:கோபா குழுவில் அம்பலமான தகவல்

2014-2017 காலப்பகுதியில் சப்ரகமுவ மாகாண சபையின் முன்னாள் முதலமைச்சருக்கு அனுமதிக்கப்பட்ட எரிபொருள்...