சிறுவர்களுக்கான தடுப்பூசி வழங்கும் வேலைத் திட்டம் இன்று முதல் ஆரம்பம்

Date:

கொரோனா வைரஸ் (கொவிட் 19) பரவலை கட்டுப்படுத்தும் நோக்குடன் சிறுவர்களுக்கான தடுப்பூசி வழங்கும் வேலைத் திட்டம் லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையில் இன்று (24) மேற்கொள்ளப்படவுள்ளது.

இன்று முதல் நாள் சுமார் 100 சிறுவர்களுக்கு தடுப்பூசி வழங்க திட்ட மிடப்பட்டுள்ளதாக வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் ஜி விஜேசூரிய தெரிவித்தார்.

இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், இந்த தடுப்பூசிய, முதலில் பல்வேறு நோய்கள் மற்றும் குறைபாடுகள் உள்ள குழந்தைகளுக்கு வழங்கப்படும். தடுப்பூசி வழங்குவதற்கு முன்னர் அது தொடர்பாக அவர்களுக்கு தெளிவூட்டவும், குழந்தையின் பாதுகாவலரிடம் எழுத்துமூல அனுமதியைப் பெற நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.

அத்துடன், குழந்தையின் பாதுகாவலரின் அனுமதியின்றி குழந்தைகளுக்கு ஒருபோதும் தடுப்பூசி வழங்கப்பட மாட்டாது. பல தாய்மார்கள் ஏற்கனவே தங்கள் குழந்தைகளுக்கு தடுப்பூசி வழங்க விருப்பம் தெரிவித்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

மேலும், தடுப்பூசி நடவடிக்கைகள் விடுமுறை நாட்களிலும் அதே முறையில் மேற்கொள்ளப்படும். தம்மிடம் சிகிச்சைக்கு வரும் நோய்வாய்ப்பட்டுள்ள குழந்தைகளுக்கு தடுப்பூசி வழங்கும் திகதியை விசேட வைத்திய நிபுணர் குழந்தைகளின் பாதுகாவலருக்கு தெரியப்படுத்துவார் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

(அரசாங்க தகவல் திணைக்களம்)

Popular

More like this
Related

கல்கிஸ்ஸை சட்டத்தரணி தாக்குதல் சம்பவம்; பொலிஸ் அதிகாரிக்கு பிணை

கல்கிஸ்ஸை நீதிமன்ற வளாகத்திற்குள் பொலிஸ் அதிகாரியொருவர் சட்டத்தரணியொருவரைத் தாக்கிய சம்பவம் தொடர்பாக...

WHO அமைப்பின் 78ஆவது பிராந்திய மாநாடு இன்று ஆரம்பம்!

உலக சுகாதார அமைப்பின் (WHO) தென் மற்றும் தென்கிழக்கு ஆசியாவிற்கான 78ஆவது...

*பாகிஸ்தான் ஆப்கானிஸ்தான் மோதல் உச்சம்: கத்தார், சவூதி அரேபியாவின் தலையீடு!

பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் இடையே நடந்த தாக்குதலில் பாகிஸ்தான் தரப்பில் சுமார்...

எகிப்தில் காசா போர் நிறுத்த மாநாட்டுக்கு செல்லும் வழியில் 3 கத்தார் தூதர்கள் விபத்தில் சிக்கி பலி

எகிப்தின் கடற்கரை நகரமான சர்ம் எல்-ஷேக்கிற்கு அருகில் நடந்த கார் விபத்தில்...