சீனியை கட்டுப்பாட்டு விலையில் விற்பனை செய்ய மொத்த விற்பனையாளர்களுக்கு வழங்க தீர்மானம் | வர்த்தக அமைச்சு

Date:

அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் நாயகத்தின் கீழுள்ள உணவுப் பொருட்கள் ஆணையாளர் திணைக்களத்தின் ஊடாக தனியார் துறையின் மொத்த விற்பனையாளர்களுக்கு சீனி விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய, குறித்த சீனி அரசாங்கத்தினால் விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாட்டு விலையில் விற்பனை செய்ய உள்ளூர் மொத்த விற்பனையாளர்களுக்கு வழங்கப்படும் என்று வர்த்தக அமைச்சு தெரிவித்துள்ளது.

இதன்போது, வெள்ளை சீனி ஒரு கிலோ 117 ரூபாவுக்கும், சிவப்பு சீனி கிலோவொன்று 120 ரூபாவுக்கும் எந்தவொரு களஞ்சியசாலையிலும் இருந்து விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இந்த செயற்பாடு தொடர்பில் மேலதிக விபரங்களை 0113 681 797 என்ற தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்வதன் மூலம் பெற்றுக் கொள்ள முடியும்.

Popular

More like this
Related

முதலில் சுடுவோம்; பிறகுதான் பேசுவோம்: அமெரிக்காவுக்கு டென்மார்க் எச்சரிக்கை

கிரீன்லாந்துக்குள் அமெரிக்க வீரா்கள் நுழைந்தால், தளபதிகளின உத்தரவுக்காக காத்திராமல் தங்கள் நாட்டு...

தற்காலிகமாக செயலிழந்த பொதுப் பாதுகாப்பு அமைச்சின் இணையத்தளம்!

பொது மக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற விவகாரங்கள் அமைச்சின் இணையத்தளத்தைப் பயன்படுத்துவது...

அம்புலுவாவ மலையில் அனைத்து கட்டுமானப் பணிகளையும் நிறுத்த உத்தரவு

அம்புலுவாவ மலையில் அனைத்து கட்டுமானப் பணிகளையும் நிறுத்த தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு...

தாழமுக்கம் திருகோணமலைக்கு 100 கி.மீ. தொலைவில்:50-60 கி.மீ வேகத்தில் மிகப்பலத்த காற்று

இலங்கைக்குத் தென்கிழக்கே வங்காள விரிகுடா கடலில் உருவான ஆழ்ந்த தாழமுக்கம் தொடர்பில்...