செல்வராசா கஜேந்திரன் பிணையில் விடுதலை!

Date:

உணவு தவிர்ப்பு போராட்டத்தில் உயிர்துறந்த திலீபனின் 34ஆவது நினைவேந்தலை முன்னிட்டு, அவரின் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்த முற்பட்டதாக கைது செய்யப்பட்ட தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வராசா கஜேந்திரன் காவல்துறை பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

1987ஆம் ஆண்டு செப்டம்பர் 15 ஆம் திகதி, ஐந்து கோரிக்கைகளை முன்வைத்து திலீபன் உணவு தவிர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்து 11 நாட்களுக்கு பின்னர் உயிர்துறந்தார்.இதையடுத்து, வருடாந்தம் செப்டெம்பர் 15 ஆம் திகதி முதல் 11 நாட்கள் திலீபனின் நினைவேந்தல் வாரம் இடம்பெற்று வருகின்றது.

இதற்கமைய, நீதிமன்ற தடை உத்தரவை மீறி நல்லூரில் உள்ள திலீபனின் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்த நடவடிக்கை எடுத்த குற்றச்சாட்டில் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் கைதுசெய்யப்பட்டதுடன், தனிமைப்படுத்தல் விதிகளை மீறியமைக்காக மேலும் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

Popular

More like this
Related

கொழும்பு பல்கலைக்கழகத்தில் நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு

நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களை கௌரவிக்கும் சிறப்பு...

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகள் வெளியானது

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகளைக் கல்வி அமைச்சு...

டிரம்பின் ‘அமைதித் திட்டம்’ வெற்றியளிக்குமா?

உண்மையில் காசா பகுதியை உள்ளடக்கிய மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் மோதல் அக்டோபர்...

பிரதமர் சீனாவிற்கு விஜயம்

“பெண்கள் மீதான உலகளாவிய தலைவர்கள் கூட்டத்தில்” கலந்து கொள்வதற்காக பிரதமர் கலாநிதி...