தனியார் தொலைகாட்சியில் ஜம்இய்யா Zoom ஊடாக நடாத்திய ஒரு கூட்டம் தொடர்பில் வெளியிடப்பட்ட ஒலிப்பதிவு தொடர்பாக அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா விளக்கம்!

Date:

நேற்று (12) தனியார் தொலைகாட்சியில் ஜம்இய்யா Zoom ஊடாக நடாத்திய ஒரு கூட்டம் தொடர்பில் வெளியிடப்பட்ட ஒலிப்பதிவு தொடர்பாக ஜம்மியத்துல் உலமா விளக்கம் அளித்துள்ளது.

மேற்குறிப்பிட்ட கூட்டம் கடந்த 2021.07.07 ஆம் திகதி இந்நாட்டிலுள்ள முஸ்லிம் சிவில் அமைப்புகளுடன் முஸ்லிம் சமூகம் எதிர்நோக்கும் சவால்கள் தொடர்பில் கலந்துரையாடுவதற்காக அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா Zoom ஊடாக நடாத்திய கூட்டமாகும். இதில் 24 முஸ்லிம் சிவில் அமைப்புகள் அழைக்கப்பட்டதோடு, 50 க்கும் அதிகமான நபர்கள் கலந்து கொண்டனர்.

இந்நாட்டு பிரஜைகள் என்ற அடிப்படையில் ஜனநாயக விழுமியங்களைப் பேணி நாம் எதிர்நோக்கும் சவால்கள் பற்றி கலந்துரையாடுவது எமது ஜனநாயக ரீதியான உரிமையாகும். எனினும் ஏதோ ஒரு வகையில் இதன் ஒலிப்பதிவு சிலருக்கு சென்றடைந்துள்ளது. இந்த செயலை செய்தவர் அமானிதத்திற்கு மோசடி செய்து, பண்பாட்டு ரீதியான ஒரு தவறை செய்திருக்கின்றார்.

எனவே நாம் முகம் கொடுக்கக்கூடிய சவால்களை சரியான முறையில் எதிர்கொண்டு, எல்லோரும் ஒன்றுபட்டு, நல்லெண்ணத்துடன் செயற்படுவோமாக என அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா தெரிவித்துள்ளது.

 

அஷ்ஷைக் எம். அர்கம் நூராமித்

பொதுச் செயலாளர் .

அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா.

1 COMMENT

Comments are closed.

Popular

More like this
Related

நிரந்தர சமாதானத்திற்கு மாவட்ட சர்வமத அமைப்புக்களின் பங்களிப்பு குறித்து விளக்கிய மாகாண மட்ட கலந்துரையாடல்!

இலங்கை தேசிய சமாதான பேரவை ஏற்பாடு செய்த நல்லிணக்கம் மற்றும் சமூக...

தொடர்ந்து பெய்து வரும் மழையால் எலிக்காய்ச்சல் பரவும் அபாயம்

நாட்டில் தொடர்ந்து பெய்து வரும் மழையால் எலிக்காய்ச்சல் பரவும் அபாயம் அதிகரித்துள்ளதாக...

ரியாதில் உலக சாதனை படைத்த இலங்கை சர்வதேச பாடசாலை மாணவர்களுக்கு இலங்கைத் தூதர் அமீர் அஜ்வத் வழங்கிய சிறப்பு கௌரவிப்பு

சவூதி அரேபியாவின் இலங்கைத் தூதரும் ரியாதிலுள்ள இலங்கை சர்வதேச பாடசாலையின் (SLISR)...

30 மணி நேரத்திற்குள் மழை மற்றும் காற்றுடனான காலநிலை அதிகரிக்க கூடும்!

தென்மேற்கு வங்காள விரிகுடாவில் நிலைகொண்டிருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி நேற்று...