தனியார் தொலைகாட்சியில் ஜம்இய்யா Zoom ஊடாக நடாத்திய ஒரு கூட்டம் தொடர்பில் வெளியிடப்பட்ட ஒலிப்பதிவு தொடர்பாக அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா விளக்கம்!

Date:

நேற்று (12) தனியார் தொலைகாட்சியில் ஜம்இய்யா Zoom ஊடாக நடாத்திய ஒரு கூட்டம் தொடர்பில் வெளியிடப்பட்ட ஒலிப்பதிவு தொடர்பாக ஜம்மியத்துல் உலமா விளக்கம் அளித்துள்ளது.

மேற்குறிப்பிட்ட கூட்டம் கடந்த 2021.07.07 ஆம் திகதி இந்நாட்டிலுள்ள முஸ்லிம் சிவில் அமைப்புகளுடன் முஸ்லிம் சமூகம் எதிர்நோக்கும் சவால்கள் தொடர்பில் கலந்துரையாடுவதற்காக அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா Zoom ஊடாக நடாத்திய கூட்டமாகும். இதில் 24 முஸ்லிம் சிவில் அமைப்புகள் அழைக்கப்பட்டதோடு, 50 க்கும் அதிகமான நபர்கள் கலந்து கொண்டனர்.

இந்நாட்டு பிரஜைகள் என்ற அடிப்படையில் ஜனநாயக விழுமியங்களைப் பேணி நாம் எதிர்நோக்கும் சவால்கள் பற்றி கலந்துரையாடுவது எமது ஜனநாயக ரீதியான உரிமையாகும். எனினும் ஏதோ ஒரு வகையில் இதன் ஒலிப்பதிவு சிலருக்கு சென்றடைந்துள்ளது. இந்த செயலை செய்தவர் அமானிதத்திற்கு மோசடி செய்து, பண்பாட்டு ரீதியான ஒரு தவறை செய்திருக்கின்றார்.

எனவே நாம் முகம் கொடுக்கக்கூடிய சவால்களை சரியான முறையில் எதிர்கொண்டு, எல்லோரும் ஒன்றுபட்டு, நல்லெண்ணத்துடன் செயற்படுவோமாக என அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா தெரிவித்துள்ளது.

 

அஷ்ஷைக் எம். அர்கம் நூராமித்

பொதுச் செயலாளர் .

அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா.

1 COMMENT

Comments are closed.

Popular

More like this
Related

கொழும்பு பல்கலைக்கழகத்தில் நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு

நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களை கௌரவிக்கும் சிறப்பு...

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகள் வெளியானது

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகளைக் கல்வி அமைச்சு...

டிரம்பின் ‘அமைதித் திட்டம்’ வெற்றியளிக்குமா?

உண்மையில் காசா பகுதியை உள்ளடக்கிய மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் மோதல் அக்டோபர்...

பிரதமர் சீனாவிற்கு விஜயம்

“பெண்கள் மீதான உலகளாவிய தலைவர்கள் கூட்டத்தில்” கலந்து கொள்வதற்காக பிரதமர் கலாநிதி...