பரீட்சை சுட்டெண்ணை மறந்த மாணவர்கள் எவ்வாறு பெறுபேறுகளை அறிந்துகொள்வது

Date:

2020ம் ஆண்டுக்கான கல்வி பொது தராதர சாதாரண தர பரீட்சை பெறுபேறுகள் நேற்றிரவு வெளியான நிலையில், மாணவர்களில் பெரும்பாலானோர் தமது சுட்டெண்ணெ மறந்துள்ளமை குறித்து தகவல் கிடைத்துள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பூஜித்த தெரிவிக்கின்றார்.

அவ்வாறு தமது சுட்டெண்ணை மறந்த மாணவர்கள், தேசிய அடையாளஅட்டை இலக்கத்தை பயன்படுத்தி, தமது பரீட்சை பெறுபேறுகளை பார்வையிடவோ அல்லது தரவிறக்கம் செய்துக்கொள்ளவோ முடியும் என அவர் அறிவித்துள்ளார்.

எந்தவொரு சந்தர்ப்பத்திலும், பெறுபேறுகளை பார்வையிட முடியும் என தெரிவித்த அவர், அதற்காக பணம் செலுத்த வேண்டிய அவசியம் கிடையாது எனவும் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, பரீட்சை பெறுபேறுகள் தொடர்பில் ஏதேனும் பிரச்சினைகள் காணப்படுமாயின், அது தொடர்பில் அறிந்துக்கொள்வதற்கு விசேட தொலைபேசி இலக்கங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

011 2 784 208
011 2 784 537
011 3 140 314

1911

https://fb.watch/8d9N1YE_Lk/

Popular

More like this
Related

இன்று முதல் முச்சக்கர வண்டி கட்டணங்களில் மாற்றம்

ஒரு கிலோ மீட்டருக்கான முச்சக்கர வண்டி கட்டணத்தை 10 ரூபாவினால் அதிகரிப்பதற்கு...

பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் அநீதியான கைது: உச்ச நீதிமன்றத்தில் மாவனல்லை இளைஞருக்குக் கிடைத்த நீதி.

மாவனல்லைப் பகுதியைச் சேர்ந்த 21 வயதுடைய முகமது ரிஃபாய் முகமது சுஹைல்...

பாண் உள்ளிட்ட பேக்கரி உற்பத்திப் பொருட்களின் விலை உயர்வு!

இன்று நள்ளிரவு முதல் 450 கிராம் எடையுள்ள ஒரு இறாத்தல் பாணின்...

பாகிஸ்தானின் 86-வது தேசிய தினம்: இலங்கையில் விமரிசையான கொண்டாட்டம்!

இலங்கையில் வாழும் பாகிஸ்தானிய சமூகம் மற்றும் இலங்கையிலுள்ள பாகிஸ்தான் உயர்ஸ்தானிகராலயம் பாகிஸ்தானின்...