பாடசாலைகளை ஆரம்பிப்பது தொடர்பான சுகாதார வழிகாட்டல் கல்வி அமைச்சிடம் கையளிப்பு!

Date:

5 ஆம் தரத்திற்கு மேற்பட்டவர்களுக்கு பாடசாலைகளை மீள ஆரம்பிப்பதற்கான சுகாதார வழிகாட்டல்களை கல்வி அமைச்சின் செயலாளரிடம் ஒப்படைத்ததாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

கொவிட் பரவல் காரணமாக பாடசாலைகள் தற்காலிகமாக மூடப்பட்டன.எனினும், நாட்டில் இதுவரையில் கொவிட் அச்சம் முழுமையாக குறைவடையாத நிலையில், பாடசாலைகளை மீள ஆரம்பிப்பது சவாலான ஒரு விடயமாகவே உள்ளது.

இந் நிலையில், பாடசாலைகளை மீள ஆரம்பிப்பதற்காக சுகாதார அமைச்சு தயாரித்த சுகாதார வழிகாட்டி இன்று (21) கல்வி அமைச்சின் செயலாளரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.அதற்கமைய, தரம் 5 வரையான ஆரம்ப வகுப்புகளை கொண்ட பாடசாலைகளை திறப்பது தொடர்பான வழிகாட்டல்கள் அதில் அடங்கியுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல் இடம்பெற்று 7ஆண்டுகள் நிறைவு

கடந்த 2019ஆம் ஆண்டு ஏப்ரல் 21ஆம் திகதி கத்தோலிக்க தேவாலயங்கள் மற்றும்...

நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் பிற்பகலில் மழைக்கான சாத்தியம்

நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் பி.ப. 1.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது...

நாட்டின் பல மாகாணங்களுக்கு கடும் வெப்பம் குறித்த எச்சரிக்கை

நாளை (21) நாட்டின் பல மாகாணங்களில் மனித உடலால் உணரப்படும் வெப்பத்தின்...

புத்தாண்டு காலத்தில் அதிவேக நெடுஞ்சாலைகள் மூலம் 441 மில்லியன் ரூபாவிற்கும் அதிக வருமானம்

சித்திரை புத்தாண்டு காலப்பகுதியை முன்னிட்டு ஏப்ரல் 10 முதல் 18 ஆம்...