பாடசாலைகளை மீள திறப்பது குறித்து கல்வி அமைச்சர் நாளை விசேட தீர்மானம்!

Date:

பாடசாலைகளை மீண்டும் திறப்பது தொடர்பில் கல்வி அமைச்சு கவனம் செலுத்தியுள்ளது.பல கட்டங்களில் கீழ் பாடசாலைகளை மீள திறக்க எதிர்ப்பார்த்துள்ள நிலையில் இது குறித்து நாளை (24) பொதுமக்களுக்கு அறிவிக்கப்படும் என்றும் கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

பாடசாலைகளை மீண்டும் திறப்பது குறித்து சுகாதார அமைச்சு சமீபத்தில் கல்வி அமைச்சிற்கு வழிகாட்டுதல்களை பெற்றுக் கொடுத்திருந்தது.அந்த வழிகாட்டுதல்களின்படி பாடசாலைகளை திறக்க திட்டமிடப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.அதன்படி, மீண்டும் பாடசாலைகளை திறப்பது குறித்து கல்வி அமைச்சர் நாளைய தினம் (24) விசேட அறிவிப்பொன்றை மேற்கொள்ளவுள்ளார்.

இதேவேளை, பாடசாலைகளை மீண்டும் திறக்கும் போது உரிய சுகாதார வழிகாட்டுதல்களில் கவனம் செலுத்துவது மிகவும் முக்கியம் என சுகாதார சேவைகள் பிரதி பணிப்பாளர், வைத்திய நிபுணர் வைத்தியர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

பேரிடரால் அழிவடைந்த வீடுகளுக்கு பதிலாக புதிய குடியிருப்புத் தொகுதிகளை அமைக்க திட்டம்

திட்வா புயல் தாக்கத்தினால் அழிவடைந்த வீடுகளுக்கு பதிலாக குடியிருப்புத் தொகுதிகளை அமைப்பதற்கு...

நாட்டின் பல்வேறு பகுதிகளில் காற்றின் தரம் குறித்து அவதானம்

நாட்டின் பல்வேறு பகுதிகளில் காற்றின் தரம் குறித்து அவதானம் செலுத்தப்பட்டுள்ளது. நாட்டின் வடக்கு,...

சிப் அபகஸ் புத்தளம் கிளையைச் சேர்ந்த மாணவர்கள் 52 விருதுகளைத் தம் வசப்படுத்திக் கொண்டனர்.

-எம்.யூ.எம்.சனூன் கொழும்பு சுகததாச உள்ளக விளையாட்டரங்கில் அண்மையில் (14) நடைபெற்ற அகில இலங்கை...

அதிபரை விழா மேடையில் விமர்சித்த மாணவி:அறிக்கை கோரியுள்ள கல்வியமைச்சு

தற்போது சமூக ஊடகங்களில் பேசும்பொருளாக மாறியுள்ள கொழும்பு சிறிமாவோ பண்டாரநாயக்க கல்லூரி...