புத்தளம் ஜனாஸா நலன்புரி சங்கத்தின் ஜனாஸா வாகன சேவை ஆரம்பம்!

Date:

புத்தளம் ஜனாஸா நலன்புரி சங்கத்தின் முயற்சியினால் கொள்வனவு செய்யப்பட்டுள்ள ஜனாஸாவை எடுத்துச் செல்வதற்கான வாகன சேவை நேற்று முதல் (20) ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இவ் வாகனத்தை கொள்வனவு செய்வதற்கு உதவி புரிந்த ஊர் மக்கள், வெளிநாடுகளில் தொழில் புரியும் ஊர் மக்களுக்கும், நிதி திரட்டும் பணியில் ஈடுபட்டவர்களுக்கும் மற்றும் பங்களிப்புகளை வழங்கிய அனைவருக்கும் புத்தளம் ஜனாஸா நலன்புரி சங்கம் நன்றிகளை தெரிவித்துள்ளது.

இவ் வாகனம் புத்தளம் நகர எல்லைக்குள் இலவசமாகவும் ,தூர இடங்களுக்கான சேவைகளின் போது  கட்டண அறவீட்டுடன் சேவைகளை வழங்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.இதன் மூலம் பெறப்படுகின்ற பணம் வாகன பராமரிப்பு மற்றும் தாபன செலவிற்காக பயன்படுத்தப்படும் என இச் சங்கம் மேலும் தெரிவித்துள்ளது.இம் மகத்தான சேவைகளை செய்த புத்தளம் ஜனாஸா நலன்புரி சங்கத்திற்கு எமது பாராட்டுக்கள்.

 

 

Popular

More like this
Related

நாட்டின் பல மாகாணங்களுக்கு கடும் வெப்பம் குறித்த எச்சரிக்கை

நாளை (21) நாட்டின் பல மாகாணங்களில் மனித உடலால் உணரப்படும் வெப்பத்தின்...

புத்தாண்டு காலத்தில் அதிவேக நெடுஞ்சாலைகள் மூலம் 441 மில்லியன் ரூபாவிற்கும் அதிக வருமானம்

சித்திரை புத்தாண்டு காலப்பகுதியை முன்னிட்டு ஏப்ரல் 10 முதல் 18 ஆம்...

புதிய தூதுவர்கள் மற்றும் உயர்ஸ்தானிகர்கள் ஜனாதிபதியிடம் நற்சான்றிதழ் பத்திரங்கள் கையளிப்பு

இலங்கைக்காக நியமிக்கப்பட்டுள்ள நான்கு புதிய தூதுவர்கள் மற்றும் இரண்டு உயர்ஸ்தானிகர்கள் இன்று...

அதிக கட்டணத்தை அறவிடும் மற்றும் பயணச் சீட்டுக்கள் வழங்காத பஸ்களை முறையிட 1955 தொலைபேசி இலக்கம்

அரசாங்கத்தால் நிர்ணயிக்கப்பட்டுள்ள கட்டணத்தை விட அதிக கட்டணத்தை அறவிடும் மற்றும் பயணச்...