பொலிஸாரின் பெயரில் நிதி மோசடி செய்த இளைஞன் கைது!

Date:

புத்தளம் பொலிஸாரின் பெயரைப் பயன்படுத்தி நிதி மோசடியில் ஈடுபட்டார் என்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு இளைஞர் ஒருவர் நேற்று (25) விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

கணவன் – மனைவிக்கு இடையில் ஏற்பட்ட பிரச்சினை தொடர்பில் புத்தளம் பொலிஸ் நிலையத்தில் மனைவியின் தரப்பால் செய்யப்பட்ட முறைப்பாடு ஒன்றை நீக்குவதற்கு நடவடிக்கை எடுப்பதாகவும், அதற்காக பொலிஸ் அதிகாரிகளுக்கு இலஞ்சமாக பணம் வழங்க 1 இலட்சத்து 50 ஆயிரம் ரூபா வழங்க வேண்டும் எனவும் சந்தேக நபர், கணவனின் தரப்பினரிடம் கேட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதனையடுத்து, கணவன் சார்பில் குறித்த சந்தேக நபர் கேட்ட பணத்தில் 1 இலட்சத்து 20 ஆயிரம் ரூபாவை வழங்கியுள்ளனர்.பின்னர் பணத்தைப் பெற்றுக்கொண்ட இளைஞனின் நடவடிக்கைகளில் சந்தேகம் கொண்ட பணத்தைக் கொடுத்தவர்கள் சம்பவம் பற்றி புத்தளம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்தனர்.

அத்துடன், தமக்கும் – சந்தேக நபருக்கும் இடையில் இடம்பெற்ற தொலைபேசி மூலமான உரையாடலின் ஒலிப்பதிவையும் முறைப்பாட்டாளர்கள் பொலிஸாரிடம் கையளித்துள்ளனர்.இந்த முறைப்பாட்டின் அடிப்படையில், விசாரணைகளை முன்னெடுத்த புத்தளம் தலைமையக பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி பி. குமாரதாச தலைமையிலான பொலிஸார் கடந்த வெள்ளிக்கிழமை (24) விருதோடைப் பிரதேசத்தைச் சேர்ந்த சந்கே நபரான இளைஞனை கைது செய்தனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேக நபர் சனிக்கிழமை (25) புத்தளம் மாவட்ட பதில் நீதிவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்ட போது, அவரை இம்மாதம் 30 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு பதில் நீதிவான் உத்தரவிட்டுள்ளார்.இந்த சம்பவம் தொடர்பில் புத்தளம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

கொழும்பு பல்கலைக்கழகத்தில் நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு

நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களை கௌரவிக்கும் சிறப்பு...

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகள் வெளியானது

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகளைக் கல்வி அமைச்சு...

டிரம்பின் ‘அமைதித் திட்டம்’ வெற்றியளிக்குமா?

உண்மையில் காசா பகுதியை உள்ளடக்கிய மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் மோதல் அக்டோபர்...

பிரதமர் சீனாவிற்கு விஜயம்

“பெண்கள் மீதான உலகளாவிய தலைவர்கள் கூட்டத்தில்” கலந்து கொள்வதற்காக பிரதமர் கலாநிதி...