விவசாயிகள் போராட்டம் நடத்தினால் அரிசி இறக்குமதி செய்யப்படும்-மஹிந்தானந்த அளுத்கமகே!

Date:

இரண்டு வருடங்களுக்குள் நெல்லின் அதிகபட்ச விலை 25 ரூபாவால் உயர்த்தப்பட்டுள்ளதாக விவசாய அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்தார்.

இத்தகைய பின்னணியில் விவசாயிகள் போராட்டம் நடத்த தயாராக இருந்தால், வர்த்தக அமைச்சரின் தலையீட்டில் அரிசியை இறக்குமதி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் குறிப்பிட்டார்.

விவசாய அமைச்சில் இன்று (17) நடைபெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்தார்.

“விவசாய அமைச்சராக, நான் இந்த அரிசியை இறக்குமதி செய்வதை நிறுத்தி வைத்துள்ளேன். எனவே, விவசாயிகள் நெல்லை விற்காவிட்டால், அரசு அரிசியை இறக்குமதி செய்யலாம்.”என்று தெரிவித்தார்.

 

Popular

More like this
Related

நிலவும் சீரற்ற வானிலை: க.பொ.த உயர்தரப் பரீட்சார்த்திகளுக்கு அவசர உதவி இலக்கங்கள் அறிவிப்பு!

தற்போது நிலவும் சீரற்ற வானிலையால் க.பொ.த உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்களுக்கு...

இஷாரா செவ்வந்திக்கு ஆகஸ்ட் 21 வரை விளக்கமறியல் நீடிப்பு

திட்டமிட்ட குற்றக்குழுவின் உறுப்பினரான கணேமுல்ல சஞ்சீவ கொலைச் சம்பவம் தொடர்பாகக் கைது...

புனித மக்கா மண்ணில் மிளிரும் இலங்கையின் குரல்: சர்வதேச குர்ஆன் போட்டியில் இலங்கையைச் சேர்ந்த ஸயீத் முஹம்மத் இப்பத்!

சவூதி அரேபியாவின் புனித மக்கா நகரில் அமைந்துள்ள புனித மஸ்ஜிதுல் ஹராம்...